தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா, உமா, துரை, சத்யன், மீரா ஆகியோர் கோவிலுக்கு வர ஒரு சாமியார் பெண்மணி உன் பொண்ணுக்கும்  வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நேரம் சரியில்ல ஆபத்து இருக்கு என்று சொல்ல உமா அதிர்ச்சி அடைந்தாள்.


இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் இந்த விஷயத்தை எல்லாரிடமும் சொல்ல சீதா ஷாக்காக சத்யன் இதெல்லாம் நம்பாதீங்க என்று வீட்டிற்கு அழைத்து வருகிறான், இங்கே கல்பனா சீதாவுக்கு இந்நேரம் வயிற்று வலி வந்து செத்தே போயிருப்பா என்று ஆவலோடு காத்திருக்க சீதா நார்மலாக வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.


இந்த நேரம் பார்த்து கல்பனாவிற்கு வயிற்று வலி வர அவள் வலியில் துடிக்க ஹாஸ்பிடல் போகலாம் என்று அழைக்க கல்பனா விஷயம் தெரிந்து விடும் என்பதால் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி  விடுகிறாள். பிறகு ரூமுக்கு அழைத்து சென்று உட்கார வைக்க டாக்டரை கூப்பிடவா என்று கேட்க வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள்.






பிறகு ப்ரியா, காவியா ஆகியோர் உள்ளே வந்து அந்த சாப்பாட்டை நாங்க தான் மாத்தி வச்சோம், அதுல மருந்து கலந்திருக்குனு நீங்க முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல என்று சொல்லி மன்னிப்பு கேட்கின்றனர். சீதா ஒரு ரெசிபி செய்து சமைத்து கொண்டு வரும் போது இவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க 


Siragadikka Aasai: கோபத்தில் கத்திய விஜயா.. ஆவேசமான ஸ்ருதி - கலவர பூமியாக மாறும் “சிறகடிக்க ஆசை” சீரியல்


Ethirneechal: போலீசுடன் வீட்டுக்கு வந்த ஆதிரை.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து காத்திருக்கும் பிரச்சினைகள்..!