தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ் ஆகும். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களில்  பிரபலமான சீரியல் சந்தியா ராகம். மாயாவுக்கும், சீனுவுக்கும் இடையில் திருமணம் நடக்குமா? என்ற பரபரப்பான சூழலில் எபிசோட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. மாயாவுக்கும் சீனுவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்க பார்வதி லெட்டரை கொண்டு வந்த ரகுராமிடம் கொடுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன? 


மாயாவும் சீனுவும் காதலித்தாக சொல்லி மாயாவை திட்ட, ரகுராம் மாயா அப்படி தப்பு பண்ணி இருக்க மாட்டா, அவ மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்ல பத்மா டைரியை கொண்டு வந்து கொடுக்க ரகுராம் அதை படிக்க படிக்க அதிர்ச்சி அடைகிறார். சிவராமன், மணிவண்ணன் வீட்டிற்கு வருகின்றனர். ரகுராம் மாயா காதலித்து சீனுவை தானா? என்று கோபப்பட்டு டைரியை தூக்கி வீசுகிறார். 


இதை ஏன் ஏற்கனவே சொல்லல? என்று கேள்வி எழுப்ப, பத்மா அண்ணிக்கு தெரியும் என்று சொல்ல ரகுராம் ஏன் எனக்கு துரோகம் பண்ண? என்று ஜானகி மீது கோபப்படுகிறார். இங்கே சீனு இனிமே நம்மள யாராலும் பிரிக்க முடியாது என்று தாலி கட்ட செல்கிறான். 


மறுபக்கம் ரகுராம் ஜானகி மீது பயங்கர கோபப்படுகிறார். லிங்கம் வீட்டில் பந்தக்கால் நடுவதற்காக எல்லாரும் ஆவலுடன் காத்திருக்க பார்வதி போன் செய்து சீனு மாயாவுக்கு கல்யாணம் நடந்து விட்டதாக சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி ஆகின்றனர்.  லிங்கம் நான் தோத்து போய்ட்டேன் என்று புலம்ப ஷாரு வேகவேகமாக ஓடி ஒரு கிணற்றின் முன்னாடி நின்று குதித்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்ற பரபரப்பான சூழலில் சந்தியா ராகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.