Parijatham: பைத்தியக்காரி பட்டம் கட்டத் துடிக்கும் இசை..! தப்புவாரா ஸ்ரீஜாவின் அப்பா? பாரிஜாதத்தில் இன்று!
Parijatham Serial: ஜீ தமிழ் பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெளிவர இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், விஷால் தனது போலீஸ் நண்பனை சந்தித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஸ்ரீஜாவுக்கு சவால் விடும் இசை:
அதாவது, ரம்யாவின் கொலை குறித்து விசாரித்து விவரங்களை சொல்ல சொல்லி தனது நண்பனிடம் பேசுகிறான். அதனைத் தொடர்ந்து இங்கே வீட்டில் ஸ்ரீஜா கிச்சனில் இருக்கும்போது அங்கு வந்த வர்ஷினி அவளது புடவையை தீ வைக்க, ஸ்ரீஜா சத்தம் போட்டு வர்ஷினி தான் இப்படி செய்ததாக சொல்கிறாள். நான் எதுவும் பண்ணல என்று சொல்ல, சுபத்ரா அவ எதுக்கு இதெல்லாம் பண்ண போறா? என ஸ்ரீஜாவை திட்டுகிறாள்.
ஸ்ரீஜா எவ்வளவு சொல்லியும் அவளை நம்ப மறுக்கின்றனர். அதன் பிறகு இசை உனக்கு பைத்தியக்காரி பட்டம் கட்டி இந்த வீட்டை விட்டு துரத்தாமல் விடமாட்டேன் என சவால் விடுகிறாள்.
உண்மையை கண்டுபிடிப்பாளா இசை?
அதன் பிறகு இசை மற்றும் ராகவன் ஆகியோர் ஜெயிலுக்குச் சென்று சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒருவனை ஜாமினில் வெளிய எடுக்கின்றனர். அவன் என்னை எதுக்கு வெளிய எடுத்தீங்க? என்று கேட்க, உன்கிட்ட சிலையை கொடுத்தது யார் என விசாரிக்கின்றனர். எனக்கு அவர் முகம் முழுசா தெரியாது, மாஸ்க் போட்டு இருந்தாரு என்று சொல்ல இந்த முகத்தை அடையாளம் காட்டுவியா? என்று கேட்கின்றனர்.
பிறகு ஒரு ஓவியரை வரவைத்து இவன் சொல்வதை வைத்து ட்ராயிங் ஒன்றை வரைகின்றனர். ஸ்ரீஜாவின் அப்பா தான் சிலையை கொடுத்தது என்ற உண்மை தெரிய வருமா? அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























