ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மைதிலி பேய் வேடம் போட்டு வந்தது தீபா கழுத்தை நெறிக்க அவள் கார்த்திக் சார் கார்த்திக் சார் என்று சத்தம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. தீபாவின் அலறல் சத்தம் கேட்டு கார்த்திக் ஓடி வர மைதிலி அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகிறாள். பிறகு தீபா எனக்கு ரொம்ப பயமா இருக்கு நீங்க இங்கேயே இருங்க என்று சொல்ல கார்த்தியும் தீபாவுக்கு துணையாக ரூமில் உட்கார்ந்து படி தூங்க தீபா பெட்டில் படுத்து தூங்குகிறாள்.


மறுநாள் காலையில் எல்லோரும் வீட்டிற்கு வர இருவரும் தனித்தனியாக தூங்குவதை பார்த்த மைதிலி இதுக்காகவா நாங்க உங்களை தனியா விட்டுட்டு போய் இந்தப் பனியில் தூங்கிட்டு வந்தோம் என அளுத்து கொள்கிறார். அடுத்தது தீபா கார்த்திக் சாருக்காக சில பொருட்களை வாங்க வேண்டியது இருக்கு என்று சொல்ல அதெல்லாம் நாங்களே வாங்கிட்டு வந்துட்டோம் நீ ஒன்னும் வாங்க தேவையில்லை என்று பல்பு கொடுக்கின்றனர்.


பிறகு தீபா கார்த்திக் சாருக்காக சுடுதண்ணி வைக்க வர அதையும் செய்ய விடாமல் தடுத்து விடுகின்றனர். சாப்பாடு பரிமாற வர ஜானகி நீ ஒன்னும் பண்ண வேணாம் என்று திட்ட தீபா கோபப்பட்டு வாக்குவாதம் செய்ய பிறகு அது கனவு என தெரிய வருகிறது. ஜானகியிடம் நானே பரிமாற்றம் கொடு என்று சொல்லி சாப்பாட்டை கேட்க அதுதான் இந்த வாழ்க்கை வேணான்னு சொல்லி வந்துட்டல, அப்புறம் என்ன எல்லாம் எங்களுக்கு பார்த்துக்க தெரியும், நீ வெளியே போ என்று திட்டி விட தீபா வருத்தத்தோடு வெளியே வருகிறாள்.


அதை தொடர்ந்து தீபா தனியாக பேச வேண்டும் என சொல்லி கார்த்திக்கை அழைத்துச் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.




மேலும் படிக்க: ‘திவ்யா ஸ்பந்தனா நல்லாதான் இருக்காங்க; அவங்களுக்கு ஒன்னும் இல்ல’ - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தோழி