தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பொங்கல் விழாவிற்கு தீபா ஏற்பாடு செய்த கெஸ்ட்டுகளாக விவசாயிகளும் வியாபாரிகளும் வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க..


அதாவது, பொங்கல் வைக்க இன்னும் நேரம் இருக்கே, அதுவரைக்கும் எதுக்கு சும்மா இருக்கணும் எதாவது விளையாடலாம் என்று அருணாச்சலம் சொல்கிறார். பிறகு நம்ம வீட்டு பெண்களை மட்டும் வச்சி மியூசிக் சேர் விளையாட்டு விளையாடலாம் என்று சொல்கிறார். அடுத்து விளையாட்டிற்கான ஏற்பாடுகள் தொடங்க ஒவ்வொருத்தராக வெளியேற கடைசியில் தீபா சேரை பிடிக்க அபிராமி சரிந்து கீழே விழுகிறாள்.


பிறகு தீபா அபிராமியிடம் மன்னிப்பு கேட்க, நீ வேணும்னுதான் இப்படி பண்ணியிருப்ப என்று திட்டுகிறாள். பொங்கல் வைக்கிற போட்டியில் உன்னை தோற்கடிக்கிறேன் என மனதுக்குள் சபதம் எடுக்கிறாள். அதன் பிறகு பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. தீபா கார்த்திக்கிடம் நீங்க தான் நானும் அத்தையும் செய்யற பொங்கலை சாப்பிட்டு பார்த்து எது நல்லா இருந்ததுன்னு சொல்லணும் என்று சொல்கிறாள்.


இதற்கிடையில் ஐஸ்வர்யா கல் உப்பை சர்க்கரைபோல் தூள் செய்து அதை சர்க்கரை பாட்டிலுக்கு மாற்றி தீபா பொங்கல் வைத்திருக்கும் பொருட்களில் வைத்து விடுகிறாள். பொங்கல் வைக்கும் போட்டி தொடங்க தீபாவுக்கு உதவியாக மீனாட்சியும் அபிராமிக்கு உதவியாக ஐஸ்வர்யாவும் களத்தில் இறங்குகின்றனர். அபிராமி சர்க்கரையை தேட, தீபா வைத்திருக்கும் பொருட்களில் கலந்திருக்க நீ வெல்லத்தை வைத்துத்தானே பொங்கல் செய்யப்போற? அப்புறம் எதுக்கு சர்க்கரை என திட்டி விட்டு அதை எடுத்து வந்து பொங்கல் வைக்க இருவரது பொங்கலும் ஒரே நேரத்தில் பொங்குகிறது.


பிறகு பொங்கலை எல்லாருக்கும் கொடுக்க அபிராமியின் பொங்கல் உப்பு கரிக்க குடும்பத்தார் யாரும் அதையும் வெளியில் சொல்லாமல் மறைக்கிறார்கள்.  விருந்துக்கு வந்தவர்கள் அபிராமி பொங்கல் உப்பாக இருப்பதாக சொல்லி, அபிராமி டேஸ்ட் செய்து பார்த்துவிட்டு தீபாவின் பொங்கல் தான் நன்றாக இருப்பதாக ஒப்புக்கொள்ள, ஐஸ்வர்யா அதிர்ச்சியாக தீபா மகிழ்ச்சியாகிறாள்.


பிறகு தீபா அபிராமியை சந்தித்து நன்றி சொல்ல, ”நீ வேணும்னுதான் இப்படி பண்ணி இருப்பேனு எனக்கு நல்லாவே தெரியும், மத்தவங்க முன்னாடி நம்ம குடும்ப மானம் போக கூடாதுன்னுதான் நான் அமைதியா இருந்தேன், நான் என்னைக்கும் உன்னை நம்பவும் மாட்டேன், என் மருமகளா ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன?” என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.