தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சந்திரகலாவுக்கு குறும்படம் போட்டு காட்டிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சந்திரகலாவை கலாய்த்த கார்த்திக்:

அதாவது, சந்திரகலா அபிராமி நினைவிடத்தில் பெருக்கி சுத்தம் செய்துவிட்டு வர என்னத்த டயர்டா இருக்கீங்க என்று கேட்டு கலாய்க்கிறான். இதுக்குத்தான் என்கிட்ட சவால் விடக்கூடாதுன்னு சொல்றது என்று சொல்ல, சந்திரகலா கடுப்பாகிறாள். அடுத்து அங்கு வந்த ஜாக் என்ன ஆச்சு? என்ன பிரச்சனை கேட்டு பல்பு வாங்குகிறான். 

தொடர்ந்து கார்த்திக், ரேவதியிடம் நான் ஆசைப்பட்ட மாதிரி அம்மாவோட நினைவிடம் திறந்தாச்சு, சுமங்கலி பூஜை நடத்தி ஆச்சு. ஆனா என்ன ஒன்னு சாமுண்டீஸ்வரி அத்தையை தான் அத்தை நீ கூப்பிட முடியல என வருத்தப்பட, ரேவதி எனக்கு உங்க கூட கடைசி வரைக்கும் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் என அவனை கட்டி அணைத்துக்கொள்ள கார்த்தியும் தேவதையை கட்டிக் கொள்கிறான். 

வீட்டை விட்டு விரட்டுவேன்:

பிறகு, சந்திரகலா களைப்பாக இருக்க கார்த்திக் நான் என்னைக்குமே உங்களை எதிரியா பார்த்தது கிடையாது.. உங்களை என் அத்தையா தான் பாக்குறேன் என்று சொல்ல சந்திரகலா நான் உன்னை எதிரியா தான் பார்க்கிறேன்.. கூடிய சீக்கிரம் உன்னை இந்த வீட்டை விட்டு விரட்டுவேன் என சவால் விடுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.