வித்யா, மனோஜை பார்த்து ”வேலை செய்து ப்ரோமோஷன் வாங்குவிங்கனு பார்த்தா அப்பாவா ப்ரோமோஷன் ஆகி இருக்கிங்க” என சொல்கிறார். மனோஜ் ரோகிணியிடம் ”இந்த டைம்ல நமக்கு குழந்தை வேணுமா?” என கேட்கிறார். ”வேலை இல்லாம நானே தினம் தினம் வீட்ல அசிங்கப்படுறேன்” என மனோஜ் சொல்கிறார். ”இதுக்குதான் நான் உன்னை சீக்கிரம் வேலை தேடிக்க சொன்னேன்” என்கிறார் ரோகிணி. ”நான் வித்யாவோட ஹாஸ்பிட்டல் போறேன். நீ இண்டர்வியூ போ. ஹஸ்பண்டுக்கு வேலை இல்லனா குழந்தை வேணா பொருத்துக்கும் ஆனா நம்ம குழந்தை அப்பாவுக்கு வேலை இல்லனு சொல்றதுக்கு வெட்கப்படும் போய் வேலையை தேடுற வழியப்பாரு” என்கிறார் ரோகிணி. 


”நாம ஒருவேளை செக் பண்ணி கன்ஃபார்ம் ஆயிட்டா இவரு வேண்டானு சொல்லுவாரு போல இருக்கே” என்கிறார் வித்யா. ”அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா பொய் சொன்னே, என் அப்பாவ பத்தி மொத்த குடும்பமும் சேர்ந்து கேள்வி கேட்டாங்க அதனால தான் சீன் போட்டேன்” என்கிறார் ரோகிணி. ”இன்னும் ஸ்ருதி வீட்டுக்கு வர்ல அந்த பிரச்சனைய கொஞ்சம் கொஞ்சமா ஊதி விட்டா என்ன மறந்துடுவாங்க பார்த்துக்கலாம்” என்கிறார் ரோகிணி. 


”விஜயா அவங்க வருவாங்க, கால்ல சக்கரம் கட்டுன மாதிரி அதுக்கும் இதுக்கும் அலஞ்சிக்கிட்டு இருக்காத உட்காரு” என்கிறார் அண்ணாமலை. பார்வதி, ரோகிணிக்கு ஒரு பை நிறையை மாங்காய் வாங்கி வருகிறார். ”என்னப்பா இது வீடு முழுக்க மாங்காவா இருக்கு” என முத்து அண்ணாமலையிடம் கேட்கிறார். பின் ரோகிணியும், மனோஜும் வீட்டுக்கு வருகின்றனர். ரோகிணியிடம் என்ன ஆச்சி என கேட்கின்றனர். ரோகிணி, ”ஆண்டி சாரி நான் ப்ர்க்னெண்டா இல்லை” என்று சொல்கிறார். இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சி ஆகிறார். 


”அம்மா ரோகிணி நீ வருத்தப்படாத அதெல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல சரியா நடக்கும்” என அண்ணாமலை சொல்கிறார். ”ஸ்ருதி கூட முதல்ல கர்ப்பமா ஆயிடலாம், ஆனா மீனா ஆகக் கூடாது” என விஜயா பார்வதியிடம் சொல்கிறார். பின் விஜயா ஸ்ருதிக்கு போன் செய்து வீட்டிற்கு வர சொல்கிறார். ”உன்னையும் ரவியையும் பார்க்காம என்னால இருக்க முடியல” என விஜயா சொல்கிறார். ஸ்ருதி உடனே ஃபோட்டோவை அனுப்பி பார்த்துக்கோங்க என சொல்கிறார். விஜயா ”நீங்க வீட்டுக்கு வாங்க” என சொல்கிறார். ஆனால் ஸ்ருதி ”அந்த முத்து இருக்க வீட்டுக்கு நான் வர மாட்டேன்” என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.