சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் ( Ethirneechal ) தொடரின் நேற்றைய (மே 15) எபிசோடில் ஜனனி சேர்ந்து இருக்கும் புது ஆபீஸ் வெளிநாட்டு கம்பெனி என்றாலும் அதை இங்கிருந்து நடத்துபவர் வி.கே. அவரை பற்றி ஆபீசில் இருக்கும் பெண் ஜனனியிடம் பெருமையாக பேச மற்ற ஸ்டாப்ஸ் சிரித்துக் கொள்கிறார்கள். வி.கே ஜனனியை அழைத்து அவரை பற்றி பெருமையாக பேசுகிறார். மற்ற ஸ்டாப்ஸ்களிடம் அறிமுகம் செய்து வைக்கும் போது அதை மறைந்திருந்து திருட்டுத்தனமாக பார்த்து கொண்டு இருக்கிறார் வி.கே.
பிறகு அனைவரும் உட்கார்ந்து யார் யாருக்கெல்லாம் பத்திரிகை கொடுக்க வேண்டும் என்பது பற்றி லிஸ்ட் எழுதி கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஜனனி சக்தி போன் செய்து வேளையில் சேர்ந்தது பற்றி சொல்கிறாள். வேலை எப்படி இருக்கு என அவள் சொல்லும் போது "Mr . குணசேகரன் போலவே இங்கும் ஒரு கேரக்டர் இருக்கு" என அவள் சொல்ல அதை கீழே இறங்கி வந்த குணசேகரன் கேட்டு விடுகிறார். "குணசேகரன் போன்ற ஒரு ஆள் எல்லா இடத்திலேயும் இருப்பான்" என குணசேகரன் சொல்ல அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
சொந்த பந்தங்களுக்கு பத்திரிகை வைப்பதற்காக கதிர், நந்தினி, ரேணுகா, ஞானம் மற்றும் சக்தி செல்கிறார்கள். அப்போது போன இடத்தில் பத்திரிகையில் குணசேகரன் பெயர் இல்லையே என அந்த விருந்தாளி கேட்கிறார். "குணசேகரன் பெயரை பத்திரிகையில் போடாம விட்டு இருக்கீங்க. அவர் தானே மாப்பிள்ள உங்க குடும்பத்துக்கே விலாசம்" என சொல்ல அதை கேட்டு கடுப்பான கதிர் "யோவ் அப்படினு யார் சொன்னது? நீ வந்து கண்ணால பாத்தியா?" என சரமாரியாக அவரை திட்டி தீர்க்க அவருக்கு எதுவும் புரியவில்லை. பிறகு அனைவரும் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் ( Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.