சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் அப்பத்தா தொடங்கி வைத்துள்ள பெண்களுக்கான டிரஸ்டின் மேனேஜிங் அதாரிட்டியை ஜீவானந்தம் கையில் ஒப்படைக்கிறார். மேலும் தனது 40% சொத்தை தனது பேரப்பிள்ளைகள் தர்ஷன், தர்ஷினி, ஐஸ்வர்யா, தாரா பெயரில் மட்டுமில்லாமல், ஜனனிக்கு பிறக்கப் போகும் பிள்ளைகள் பெயரிலும் சரிசமமாக எழுதி வைத்து விட்டதாகத் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட குணசேகரனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தனக்கு ஒன்றுமே இல்லை என ஜான்சி ராணியும் நொந்து கொள்கிறாள்.
குணசேகரனுக்கு குறிவைக்கும் கெளதம்:
தர்ஷனை தவிர மற்றவர்கள் அனைவரும் மேஜராகும் வரை அந்த சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களின் அம்மாக்களை சேரும். ஆனால் அவர்கள் பாதுகாக்க மட்டுமே முடியும், அதை யார் பெயரில் எழுதி வைக்கவோ அனுபவிக்கவோ முடியாது எனத் தெளிவாக சொல்லிவிடுகிறார் அப்பத்தா. பின்னர் விழாவுக்கு வந்து இருக்கும் ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களுக்கும் அன்பளிப்பை ஆதிரை, கதிர் மற்றும் ஞானத்தை அழைத்து கொடுக்கச் சொல்கிறார். பின்னர் ஜீவானந்தத்திற்கு அன்புப்பரிசை குணசேகரனை கொடுக்க சொல்கிறார். அவரும் மேடையில் ஏறி கொடுக்கவே அங்கே கௌதம் குணசேகரனை துப்பாக்கியால் குறி வைக்கிறான்.
கௌதம் அங்கிருந்து எப்படியோ தப்பி விடுகிறான். ஜீவானந்தத்திற்கு போன் செய்து அவரிடம் உடனே பேச வேண்டும் என வரச் சொல்கிறான். குணசேகரன் வீட்டில் பெரிய பிரச்சினையே நடக்கிறது. அனைத்திற்கும் காரணம் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் என விசாலாட்சி அம்மா திட்ட, சக்தி ஜீவானந்தத்தின் மனைவியின் கொலை பற்றி சொல்ல வாய் எடுக்கிறான். ஆனால் அவனை ஜனனியும் ஈஸ்வரியும் சேர்ந்து தடுத்து விடுகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அனைவரையும் தள்ளி விட்ட குணசேகரன் ஜனனியைப் பார்த்து "கிழவி இப்படி ஆனதற்கு காரணமே நீ தான்" என மிரட்டி அப்பத்தாவை குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் அழைத்து செல்கிறார்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் அப்பத்தாவுக்கு என்ன ஆனது என அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.