'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai) சீரியலின் இன்றைய (மே 16) எபிசோடில் முத்து கல்யாண நாளை மறந்ததால் மீனா கோபித்து கொள்ள முத்து சென்று சமாதான படுத்துகிறான். இருவரும் சேர்ந்து திருமணத்துக்கு முன்னர் எங்கெல்லாம் மோதலுடன் சந்தித்து கொண்டார்கள் என்பது பற்றி சந்தோஷமாக பேசி கொள்கிறார்கள்.
மீனா அம்மாவை அவமானப்படுத்திய விஜயா: மீனாவின் அம்மா முதல் கல்யாண நாளுக்காக சீருடன் வீட்டுக்கு வர அவரை விஜயா என்ன நகையுடனா வந்து இருக்கிறீர்கள் என அவமானப்படுத்தி பேசுகிறார். முத்துவுக்கும் மீனாவுக்கும் துணி பழங்கள் எடுத்து வந்து கொடுக்க அதை பார்த்து கேவலமாக பேசுகிறாள் விஜயா. எதையும் காட்டிக்கொள்ளாமல் மீனாவின் அம்மா ரோகிணியும் மனோஜும் ஷோரூம் திறக்க போவது பற்றியும் ரோகிணி அப்பா ஜெயிலில் இருப்பது பற்றியும் விசாரித்து அவர் சீக்கிரம் வெளியில் வருவதற்காக பரிகாரம் சொல்கிறார்.
ஆனால் அதை தவறாக புரிந்து கொண்ட ரோகிணியும் விஜயாவும் மீனா அம்மா கிளம்பியதும் பயங்கரமாக திட்டுகிறார்கள். "வீட்டில் நடக்கும் விஷயங்களை ஏன் அம்மா வீட்டில் சொல்ற?" என விஜயா கடுமையாக கண்டிக்கிறாள்.