ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராம் சீதாவிடம் ரொமான்டிக்காக பேசிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது, ராம் சீதாவிடம் நெருக்கமாக சென்று ரொமான்டிக்காக பேசி பிறகு மல்லிப்பூவை எடுத்துக்காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க, சீதா “வச்சுவிட மாட்டீங்களா” என்று கேட்க, “என் பொண்டாட்டி சொன்னா என்ன வேணா செய்வேன்” என்று சொல்லி அவளுக்கு பூ வைத்து விடுகிறான்.


“உங்களுக்கு இதெல்லாம் யார் சொன்னது?” என்று சீதா கேட்க, பாட்டி தான் சொன்னாங்க என்று ராம் சொல்ல, பிறகு இருவருக்கும் இடையே டூயட் பாடலுடன் முதல் இரவு நடந்து முடிகிறது.


மறுநாள் காலையில் சீதா குளித்து முடித்துவிட்டு ராமின் கால்களைத் தொட்டு வணங்க, அவன் “உனக்கு யார் இதெல்லாம் சொன்னது?” என கேட்க பாட்டி தான் என்று சொல்கிறாள். “ஆனா இதையெல்லாம் பண்ண வேண்டாம், நீ இப்படி பண்ணா நான் திருப்பி பண்ணுவேன்” என்று சொல்ல, சீதா இனி பண்ண மாட்டேன் என சொல்கிறாள்.


மீண்டும் ராம் ரொமாண்டிக்காக அவளை நெருங்க சீதா வெக்கப்பட்டு கொண்டு வெளியே ஓடி வர, பாட்டி “என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க?” என்று கேட்க இரவு நடந்து விஷயத்தை சொல்கிறாள். “நல்ல விஷயம் இன்னிக்கி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போயிட்டு வாங்க” என்று பாட்டி சொல்கிறார்.


இருவரும் கோயிலுக்கு கிளம்பி வர இங்கே மகாவும் அர்ச்சனாவும் பில்லி, சூனியம் வைக்கும் சாமியாரை சந்தித்து, ராம் சீதாவை பிரிக்க வேண்டும் என சொல்ல, அவர் ஒரு எலுமிச்சம் பழத்தை மந்திரிச்சு கொடுத்து இதை அந்த வீட்டில் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.


அடுத்ததாக சீதா கோயிலுக்கு வர, மகாவைப் பார்த்து அவளிடம் வந்து பேச, மகா “கோயிலுக்கு இரண்டு பேரும் இப்படி கைய புடிச்சிட்டு வரீங்க, அநாகரிகமா இல்லையா” என கோபப்படுகிறாள். “நேத்து நைட்டு எங்களுக்குள்ள எல்லாமே நடந்துடுச்சு” என்று சொல்ல இருவரும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.


இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.