ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் தீபா குடும்பம் என எல்லோரும் ஷாப்பிங் சென்ற நிலையில், கார்த்திக் தர்மலிங்கத்திற்கு பதிலாக பில் கட்டினான். இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, கார்த்திக் எல்லோரையும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்ல தர்ம லிங்கம் குடும்பம் தனியாக ஒரு மேஜையில் உட்கார்ந்து கொள்ள கார்த்திக் மற்றும் தீபா ஒரு மேஜையில் உட்கார்ந்து கொள்கின்றனர். 


தர்மலிங்கம் எனக்கு தலைவலியா இருக்கு ஒரு காபி மட்டும் போதும் என்று சொல்லிவிட, "தீபா எனக்கு இதுல இருக்க பாதி டிஷ் என்னன்னு தெரியல, நீங்களே ஆர்டர் பண்ணுங்க, நான் சாப்பிட்டு பார்க்கிறேன்" என்று சொல்ல கார்த்திக் ஆர்டர் செய்கிறார். 


அதனைத் தொடர்ந்து கார்த்திக்கை ஒரு பெண் சைட் அடித்துக் கொண்டிருக்க, இதனால் பொசசிவ் ஆகும் தீபா அந்த பெண்ணை மறைத்தபடி உட்கார, அந்தப் பெண்ணும் இடம் மாறி உட்காந்து கார்த்திக்கை சைட் அடிக்க கை கழுவும் இடத்தில் வைத்து தீபா அந்த பெண்ணை அடி வெளுக்கிறாள். 


பிறகு கார்த்திக் "ஏன் அடிச்சீங்க" என்று கேட்க, "அந்தப் பொண்ணு ஒரு ஆளை சைட் அடிச்சுட்டு இருந்தா" என்று சொல்லி சமாளிக்க, "நானும் ஒரு பொண்ணு சைட் அடிச்சிட்டு இருந்தேன்" என்று தீபாவை பார்த்துக் கொண்டிருந்ததை பற்றி மறைமுகமாக சொல்கிறான். இதனால் தீபா சந்தோஷப்படுகிறாள். 


அடுத்ததாக இவர்கள் எல்லோரும் வீட்டுக்கு வர, ஐஸ்வர்யா அபிராமியிடம் "காலையில போயிட்டு எப்ப வராங்க பாருங்க" என்று ஏற்றி விட, இவர்கள் வந்ததும் அபிராமி எழுந்து சென்று விடுகிறாள். 


பிறகு தர்மலிங்கம் ரூமுக்கு போக, ஒரு நிமிஷம் என நிறுத்தி கார்த்திக் பணத்தை எடுத்துக் கொடுத்து “இந்தாங்க உங்க பணம் என்று கொடுக்க, துணி எடுக்க நீங்க செலவு பண்ணி இருக்கீங்களே, அதுக்காக இதை எடுத்துக்கோங்க” என்று சொல்ல, “உங்களுடைய பணம் எப்பவோ கிடைச்சிடுச்சு, அத உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பணம் கொடுக்க விட்டு இருக்க மாட்டீங்க. அதனாலதான் சொல்லல” என்று சொல்லி பணத்தை கொடுக்க, தர்மலிங்கம் நன்றி சொல்லி வாங்க, இதை பார்த்து ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். 


இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.