ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் தீபா ரவுடிகளிடம் இருந்து தப்பித்த நிலையில் அபிராமி சேரில் கட்டிப்போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். 


இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் ரவுடிகள் தீபாவை கண்டுபிடித்து கட்டிப்போட முயற்சி செய்ய,  அவள் “கார்த்திக் சார் வந்தா உங்களை சும்மா விட மாட்டாரு” என்று வீர வசனம் பேச, “உன்னை காட்டாமல் விட்டாலும் இந்த ரூமை விட்டு வெளியே போக முடியாது” என்று கதவை சாத்திக் கொண்டு வெளியே செல்கின்றனர். 


பிறகு தீபா அபிராமியின் கட்டை அவிழ்க்கும்போது அபிராமி கண் விழிக்க தீபா தான் கடத்தியதாக தவறாக நினைத்து கொள்கிறாள், தீபாவை திட்டி தள்ளி போய் உட்காரு என வாக்கு வாதம் செய்கிறாள், மறுபக்கம் துரை வீட்டுக்கு வர அவனது மனைவியும் மகளை அவனை நெருங்க தயங்குகின்றனர். 






“தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க, உங்க பொண்ணு உன்னை பார்த்தாலே பயந்து நடுங்குறா” என்று வெறுப்பை காட்டுகின்றனர். அடுத்ததாக ஐஸ்வர்யா நட்சத்திராவுக்கு போன் செய்து “தீபா போன் பண்ணி துரை தான் கடத்தி வைத்திருப்பதாக சொன்னா, நீ துரைக்கு போன் பண்ணி அபிராமியை மட்டும் வெளியே விட சொல்லி அத்தை கிட்ட நல்ல பேர் வாங்கிக்க” என்று ஐடியா கொடுக்கிறாள். 


இன்னொரு பக்கம் அருண் மப்டி போலீசுடன் கோயிலில் தேடுதல் வேட்டை நடத்த, ஸ்டேஷனலில் கார்த்தி தீபாவை கடத்தியது, காலேஜ் பசங்க மாதிரி இருந்ததால் அந்த மாதிரி காலேஜ் பசங்க பேர்ல ஏதாவது பெரிய கேஸ் இருக்கா பாருங்க, இல்லை பெட்டி கேஸ் எதாவது இருக்கானு பாருங்க என்று சொல்ல, அதே போல சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு போன் செய்து பேசுகின்றனர். 


சரியாக கவிதா என்ற பெண் இந்த போன் காலை எடுத்து பேசுகிறாள், இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.