தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆதிக்கு ஆக்சிடென்ட் என பாரதிக்கு கேசவ் தகவல் கொடுக்க அவள் பதறி ஹாஸ்பிடல் கிளம்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, பாரதி ஹாஸ்பிடலுக்கு பதறி அடித்து ஓடி வருகிறாள். கேசவ் நின்று கொண்டிருப்பதை பார்த்து “ஆதிக்கு என்னாச்சு? எங்க இருக்காரு” என்று கேட்க, கேசவ் உள்ள தான் இருப்பதாக சொல்ல பாரதியும் தமிழும் உள்ளே வருகின்றனர்.


ஆனால் இங்கே ஆதி ஹாயாக உட்கார்ந்து போனை  பார்த்துக் கொண்டிருக்க, பாரதி ஷாக் ஆகிறாள். ஆதி “என்மேல காதல் இல்லை என்றால் எதுக்கு வந்தீங்க? உங்களுக்கும் காதல் இருக்கு தானே? அதை ஏன் மறைக்கறீங்க என்று ஆதி பேச பாரதி பளார் பளாரென அறைந்து எல்லாரும் ஏன் இப்படி என்னை ஏமாத்துறீங்க? இனிமே என் முகத்திலேயே முழிக்காதே” என்று திட்டி விடுகிறாள்.


பாரதி வெளியே சென்றதும் தமிழ் பாப்பா “ஏன் ப்ரண்ட் இப்படி பொய் சொன்ன?” என்று கோபப்பட்டு அவனை போட்டு அடித்து அழுது கட்டிக்கொள்ள, ஆதி “இனிமே இப்படி சொல்ல மாட்டேன் ப்ரண்ட்” என்று சமாதானம் செய்கிறான். பிறகு பாரதி கண்ணீருடன் வீட்டிற்கு வர, தமிழ் அம்மா அழறாங்க என்று சொல்ல மாமியார் என்னாச்சு என்று கேட்க மனசு சரியில்லை என்று பாரதி கட்டிப்பிடித்து அழுகிறாள்.


அதன் பிறகு மாமனார் ரத்னம் கூடிய சீக்கிரம் துரைக்கும் பாரதிக்கும் கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்று சொல்லிட்டு செல்ல, பாரதி தனியாக உட்கார்ந்து அழுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் லதா “ஏன் ஆதியை வேண்டாம்னு சொல்ற, உன் வாழ்க்கைக்கு அவர் தேவை” என்று சொல்ல பாரதி அவளிடம் கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.