Ethirneechal Serial Written Update:  சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 4) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. குணசேகரன் மற்றும் உமையாள் தர்ஷினியை கோயிலுக்கு அழைத்து வருகிறார்கள். உமையாள் சித்தார்த் இன்னும் வராததால் மிகவும் டென்ஷனாக இருக்கிறாள்.


ராமசாமி மற்றும் கிருஷ்ணாசாமி இருவருக்கும் போன் செய்து ஜனனியைப் பற்றி விசாரிக்கிறாள். "ஜனனியை தூங்கிட்டேன்னு சொன்னீங்க... அப்போ சித்தார்த் பத்தி விசாரிக்க வேண்டியது தானே" எனக் கத்துகிறாள். "அங்கே இருந்து கொண்டு ஜனனி பத்தி பேசாதீங்க" என ராமசாமி சொல்லிவிட்டு பின்னர் வேறு ஏதோ ஒரு பிளான் சொல்கிறான்.




ஜனனியை காணவில்லையே என பதட்டத்தில் இருக்கும் சக்தியை கதிர் சமாதானம் செய்கிறான். "உன்னோட மகன் வரணும்னா ஜனனியையும் அவளோட குடும்பத்தையும் விட்டுடு அப்படினு சொல்ல வேண்டியது தானே" என சக்தி கதிரிடம் சொல்ல, கதிர் வேறு ஏதோ ஒரு பெரிய பிளான் பற்றி சொல்லி சக்தியை சமாதானம் செய்கிறான்.

குணசேகரன் தர்ஷினியை காரில் அழைத்துக் கொண்டு செல்லும்போது எதிரில் அரிவாளை வாயில் வைத்தபடி ஆவேசமாக எதிரில் வந்து காரை வழிமறிக்கிறான் கரிகாலன். சடன் பிரேக் போட்டு டிரைவர் காரை நிறுத்தியதும், அவனைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நந்தினி உமையாள் மகளிடம் "பக்கத்துல போய் நின்னுடாத. கழுத்து காலியா இருக்குனு தாலியை கட்டிப்பிடுவான்" என அந்தப் பெண்ணை பயமுறுத்துகிறாள். "இந்த கிறுக்கு பயல அடிச்சு தூக்குடா" என டிரைவரிடம் சொல்கிறார் குணசேகரன். அப்போதும் கரிகாலன் முறைப்பாகவே நிற்கிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.


 




நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் சக்தி வந்து உமையாளிடம் ஜனனி எங்கே எனக் கேட்டு எகிறுகிறான். அவனை குணசேகரன் அடக்குகிறார். "இந்த கல்யாணம் நடக்க கூடாது என்பதற்காக அவர்கள் அனைவரும் சேர்ந்து போடும் பிளான் இது" என சொல்லி சக்தியை அசிங்கப்படுத்துகிறார்.


"தர்ஷினி காணாமல் போனபோது கூட இப்படி தான் ஏதோ தில்லுமுல்லு வேலைகளை செய்து பின்னர் ஜீவானந்தம் தான் கடத்தி வைத்து இருந்தான் என்ற உண்மை வெளியில் வந்தது" என குணசேகரன் சொன்னதும், தர்ஷினி பயத்தில் "அப்பா அப்பா என்னை காப்பாத்துங்க அப்பா" என கத்த ஆரம்பிக்கிறாள்.


கதிரும் நந்தினியும் சேர்ந்து தர்ஷினியை சமாதானம் செய்து வைக்கிறார்கள். கதிர் சக்தியை மாடிக்கு அழைத்து சென்று சித்தார்த்தை கடத்தி வைத்திருப்பது பற்றி சொல்லி ஷாக் கொடுக்கிறான். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடின் கதைக்களம்.