சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 20) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் சக்தி, ஜனனிக்கு போன் செய்து ஷாக் ஒன்றை கொடுக்கிறான். "கிருஷ்ணசாமியும் ராமசாமியும் வந்து சித்தார்த்தை கூட்டிட்டு போயிட்டாங்க. எப்படியாது கல்யாணத்தை தடுத்து நிறுத்தியாகணும் ஜனனி " என சொல்ல ஜனனி அதிர்ச்சி அடைகிறாள்.
தர்ஷினி - சித்தார்த் கல்யாண வேலைகள் மிகவும் மும்மரமாக மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. உமையாள் அம்மா, கணவர், நாச்சியப்பன் என அனைவருமே அங்கே விருப்பமில்லாமல் வந்து இருக்கிறார்கள். "வந்தோமா, சாப்பிட்டோமா, கிளம்பினோமான்னு இருந்தா நல்லது" என குடும்பத்தினரை மிரட்டுகிறாள் உமையாள். "இந்தக் கல்யாணத்தை நடத்துவது பெரிய சவால். அதுல நாங்க ஜெயிக்கணும்" என குணசேகரன் ஆணவமாக பேசுகிறார். நாச்சியப்பன் அனைத்தையும் கேட்டு கொண்டு அமைதியாக இருக்கிறார். "தர்ஷினிக்கு கல்யாணம் பண்ணனும் என அவர் போடுற திட்டம் அவங்களுக்கு தோல்வியை மட்டும் தான் தர போகுது. அது மிகப் பெரிய தோல்வி" என ஜனனி சொல்கிறாள். கொன்றவை, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி குழப்பமாக பார்க்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
நேற்றைய எபிசோடில் கரிகாலனை அழைத்துக் கொண்டு சித்தார்த் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக ராமசாமியும் கிருஷ்ணசாமியும் செல்கிறார்கள். வழியில் நந்தினியும் ரேணுகாவும் ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து விடுகிறார்கள். அவர்களை பின்தொடர்ந்து சென்று சித்தார்த்தை கடத்தி வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார்கள்.