சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆடிட்டர் வக்கீலை அழைத்து வந்துள்ளதால் புதிதாக இவர்கள் என்ன பிளான் செய்கிறார்கள் என புரியாமல் நந்தினி, ரேணுகா மற்றும் ஜனனி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஜனனி, ரேணுகாவிடம்  11 மணிக்கு கிளாஸ் அதனால் தயாராக இருங்கள் என்கிறாள். ஒரே படபடப்பாக இருக்கிறது என்கிறாள் ரேணுகா. நந்தினி ஊக்குவிக்கும் படி பேசி ரேணுகாவை உற்சாகப்படுத்துகிறாள். இருப்பினும் குணசேகரன் என்ன பிளான் செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அதற்காக காபி கொடுப்பது போல என்ன பேசுகிறார்கள் என தெரிந்து கொண்டு வருகிறேன் என சொல்கிறாள் நந்தினி.


ஜீவானந்தம் ஒரு கிரிமினல் :


குணசேகரன் ஆடிட்டரிடம் வந்த விஷயம் குறித்து கேட்கிறார். "ஜீவானந்தம் உங்களுடைய சொத்தை சட்டப்படி அவன் பெயருக்கு மோசடி செய்து மாற்றியுள்ளேன். அதை சிவில் கேஸில் இருந்து கிரிமினல் கேஸாக மாற்றவேண்டும்" என்கிறார் வக்கீல். "அப்பத்தா மட்டும் எழுந்து வந்து இது என்னுடைய கையெழுத்து இல்லை என சொன்னால் போதும். இந்த பிரச்சனையை ஒன்னும் இல்லாமல் ஆக்கிவிடலாம்" என்கிறார் ஆடிட்டர். "ஜீவானந்தத்தை கிரிமினல் என நிரூபிக்க நமக்கு சாட்சி ஆதாரம் எல்லாம் வேண்டும். சட்டரீதியா அவன் பண்ண பத்திர பதிவை தப்பு என நாம நிரூபிக்கணும்" என்கிறார் வக்கீல். எப்படி பண்ணனும் என்பதை தெளிவாக சொல்லுங்கள் என்கிறார்கள். 



மாட்டிக்கொண்ட நந்தினி :


நந்தினி காபி எடுத்து வருவது போல அவர்கள் என்ன பேசுகிறார்கள் என ஒட்டுக்கேட்க போகிறாள். "ஷேர் யார் பேருல இருக்கோ அவங்களுக்குதான் உரிமை. உங்க அப்பத்தா சுயநினைவோடு அவனுக்கு சொத்தை எழுதி கொடுக்கவில்லை என்பதை வைத்து கேஸ் ஒன்றை போட்டு அவனை ஆபிஸில் நுழைய விடாதபடி முதலில் செய்வோம் என்கிறார் வக்கீல். "கரிகாலன் நந்தினியை போட்டு கொடுக்கிறான். இவங்க என்ன பேசுறாங்கன்னு கேட்க தானே வந்திருக்க என மாறி மாறி அவளை திட்டி அனுப்பிவிடுகிறார்கள். கீழே வந்து புலம்பி தள்ளுகிறாள் நந்தினி. 


"உங்க சொத்தை உங்களுக்கு நிச்சயம் கிடைக்க நான் எல்லா முயற்சிகளையும் எடுக்கிறேன்" என வக்கீல் நம்பிக்கை கொடுக்கிறார். "சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியவில்லை. நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என்கிறார் குணசேகரன். 


ஜனனியின் பிளான் :


"இவங்க எல்லாரும் என்ன பேசினாலும் குணசேகரன் ஜீவானந்தத்தை சந்திக்காமல் எதுவும் செய்ய முடியாது. சக்தி எல்லா தகவலையும் சேகரித்து எடுத்து வந்த பிறகு நான் ஜீவானந்தத்தை போய் சந்திக்க போகிறேன். அவனுடைய நோக்கம் என்ன என்பது தெரிந்து கொள்ள போகிறேன். உங்களுடைய உதவி தேவைப்படும் போது நிச்சயமாக கேட்கிறேன்" என்கிறாள் ஜனனி. 


 



ஜீவானந்தம் - ஈஸ்வரி சந்திப்பு :


ஈஸ்வரி அவளுடைய அப்பாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறாள். "நல்ல படியா இந்த நிலத்தை உன்னோட பெயரில் ரிஜிஸ்டர் செய்துவிட்டேன். குணசேகரனால் இனிமேல் எதுவும் செய்யமுடியாது" என்கிறார் ஈஸ்வரியின் அப்பா. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே இருக்கும்போது ஜீவானந்தம், ஈஸ்வரியின் வீட்டுக்கு வந்து இறங்குகிறான். அவனை பார்த்து அதிர்ச்சியடைகிறாள் ஈஸ்வரி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.