விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் இனியா பேசி கொண்டு இருக்கிறாள். "எப்படி இதை எல்லாம் சமாளிச்ச உனக்கு பயமா இல்லையா அம்மா" என இனியா கேட்கிறாள். "எனக்கும் பயமா தான் இருந்தது ஆனால் அதை விட உன்னோட அசைன்மென்ட் முக்கியமா தோணிச்சு. உங்க அப்பா என்னால எதுவுமே செய்ய முடியாது என சொல்லி சொல்லியே எல்லாத்தையும் என்னை செய்ய வைத்துவிட்டார்" என்கிறாள் பாக்கியா. "நடுரோட்ல வண்டி நின்றது, ரூம் கிடைக்காம திண்டாடியது, ரூமுக்கு போலீஸ் வந்தது என எல்லாமே பயமா தான் இருந்தது. ஆனால் எப்படியோ இதை முடிக்கணும் என நினைச்சேன்" என பாக்கியா சொன்னதும் இனியா அம்மாவை கட்டிக்கொள்கிறாள். பாக்கியா போய் நல்ல சாப்பாடு கிடைக்கிற இடத்தை கேட்டு தெரிந்துகொண்டு வருகிறாள். ஈஸ்வரியை சாப்பிட அழைக்கிறாள். பக்கத்தில் ஒரு காடு இருப்பதாகவும், அங்கே சென்றால் இனியா அசைன்மென்ட் செய்ய ரொம்ப உதவியா இருக்கும் என பேசிக்கொள்கிறார்கள். ஈஸ்வரி நானும் உங்களுடன் வருகிறேன் என சொல்லி கிளம்புகிறார்கள்.
Baakiyalakshmi Sep 7 Episode : ஷாக் கொடுத்த அமிர்தாவின் முதல் கணவர்... பாக்கியலஷ்மி எபிசோட் இன்று
லாவண்யா யுவராஜ் | 07 Sep 2023 01:56 PM (IST)
Baakiyalakshmi Sep 7 episode : செத்துப் போனதாக நினைத்த அமிர்தாவின் முதல் கணவர் கணேஷ் நினைவு நாள் அன்று திரும்பி வந்து அனைவருக்கு ஷாக் கொடுக்கிறான்.
பாக்கியலட்சுமி செப்டம்பர் 7 எபிசோட்
உள்ளே சென்றதும் அங்கே அவன் போட்டோவை வைத்து படையல் போட்டு இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறான். பிறகு அவர்கள் அந்த போட்டோவை எடுத்து சுத்தம் செய்கிறார்கள். "நீ உயிரோட இருக்கும் போது படையல் போட்டது ரொம்ப பெரிய தப்பு" என மன்னிப்பு கேட்கிறார்கள். பரவாயில்லை விடுங்க அப்பா என சொல்லிவிட்டு அமிர்தா எங்கே என வீடு முழுக்க தேடுகிறான். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்ததது.
Published at: 07 Sep 2023 01:56 PM (IST)