விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் இனியா அசைன்மென்ட் விஷயமாக அனைவரும் வெளியே கிளம்பத் தயாராக, பாக்கியா தன்னுடைய பர்ஸை காணவில்லை என எல்லா இடத்திலும் தேடுகிறாள். அவளுடன் சேர்ந்து மற்றவர்களும் தேடுகிறார்கள்.


இனியா "அதை நான் ஹோட்டல் டேபிளில் பார்த்தது போல ஞாபகம் இருக்கிறது" என சொல்ல, பாக்கியா "சரி நான் போய் பார்த்துட்டு வருகிறேன்" என சொல்கிறாள். "போனா போகுது நீ போகவேண்டாம்" என ஈஸ்வரி சொல்ல "பணம் போனா பரவாயில்லை அத்தை, அது நீங்க வாங்கி கொடுத்த பர்ஸ்" என்கிறாள். "பரவாயில்லை போகட்டும். நான் உனக்கு வேற பர்ஸ் வாங்கித் தருகிறேன்" என ஈஸ்வரி சொல்கிறார். 


 




பிறகு நால்வரும் காட்டுக்குள் வாழும் மக்களை சந்திப்பதற்காக செல்கிறார்கள். இனியா அவர்களிடத்தில் கேள்விகள் கேட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்த ஈஸ்வரியும் பாக்கியாவும் பெருமைப்படுகிறார்கள். 


கணேஷ் ரூமில் இருந்து வெளியில் வர, "நல்லா தூங்குனியா பா" என அவனுடைய அப்பா கேட்க, "இல்ல பா ஒரே அமிர்தா ஞாபகமாவே இருந்துது. தூங்கவே முடியல” என்கிறான் கணேஷ். வீட்டில் கரண்ட் இல்லை என சொல்ல, சரி நான் ஈபிக்கு போன் பண்றேன் என சொல்லி அப்பாவின் போனை எடுக்கிறான் கணேஷ்.


அதில் கணேஷ் அப்பா நிலாவுடன் இருக்கும் போட்டோவை பார்த்து "யார் இந்த குழந்தை?" எனக் கேட்கிறான் கணேஷ். "அது தெரிஞ்சவங்களோட குழந்தை" என சொல்லி சமாளித்து விடுகிறார் கணேஷின் அப்பா.


கணேஷின் அம்மா காபி எடுத்துக்கொண்டு சமையல் அறையில் இருந்து வர அவரிடமும் இந்த குழந்தை பற்றி அவரிடமும் கேட்க கணேஷின் அம்மா இது உன்னுடைய குழந்தை தான் என மறந்து போய் உளறிவிடுகிறார்.


"ஏன் என்னிடம் உண்மையை மறைச்சீங்க?" என கோபப்படுகிறான் கணேஷ்.  "நான் உடனே சென்னைக்கு போய் அமிர்தாவையும் நிலா பாப்பாவையும் தேடிக் கண்டுபிடித்து கூட்டிவருகிறேன்" எனக் கிளம்புகிறான். "சென்னையில் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி அமிர்தாவை கண்டுபிடிக்கலாம்" என சொல்லி கணேஷை சமாதானம் செய்கிறார் கணேஷின் அப்பா.  


 



ஈஸ்வரிக்கு கோபி போன் செய்கிறார். இனியாவின் அசைன்மென்ட்டுக்காக காட்டுக்கு வந்து இருப்பதாக ஈஸ்வரி சொல்ல, அதிர்ச்சி அடைந்த கோபி “மறுபடியும் காட்டுக்கு போய் இருக்கீங்களா?” என கேட்கிறார். “ஏதாவது பிரச்னை வந்தா என்ன செய்வீங்க? எனக் கேட்க, அது எல்லாத்தையும் பாக்கியா பாத்துக்குவா” என ஈஸ்வரி பாக்கியாவை பற்றி பெருமையாகப் பேச, கடுப்பான கோபி நெட்வொர்க் கிடைக்காதது போல ஆக்டிங் செய்து போனை கட் செய்து விடுகிறார். 


பிறகு அவர்கள் ஹோட்டலுக்கு சாப்பிட செல்கிறார்கள். அங்கு ஈஸ்வரி சப்பாத்தி கேட்க, செல்வி ஃபிரைட் ரைஸ் ஆர்டர் செய்கிறாள். “எப்ப பார்த்தாலும் இதையே தான் சாப்பிடுவீங்களா?இருங்க நான் ஆர்டர் செய்றேன்” என சொல்லி வகைவகையாக ஆர்டர் கொடுக்கிறாள் பாக்கியா. ஈஸ்வரி பாக்கியாவை ஆச்சரியமாக பார்க்கிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.