ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாப்பிட உட்கார்ந்த சௌந்தரபாண்டி ஓட்டல் சாப்பாட்டை கீழே துப்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது பரணி இப்போ எங்க அம்மாவோட அருமை நல்ல புரியுமே என்று நக்கல் அடிக்க அவர் முத்துபாண்டியிடம் நீ போய் உங்க அம்மாவை கூட்டிட்டு வாலே என்று சொல்ல முதலில் முத்துப்பாண்டி மறுக்க அதன் பிறகு சௌந்தரபாண்டி அப்பாவுக்காக இதை கூட பண்ண மாட்டியா என்று கேட்டதும் ஒப்பு கொள்கிறான். 


அடுத்து ஷண்முகம் வீட்டிற்கு வரும் முத்துப்பாண்டி ரத்னா வெளியே வர அவளை வாடி போடி என்று சொல்லி கூப்பிட நானும் வாடா போடான்னு சொன்னா மரியாதையை கெட்டு போய்டும் என்று பதிலடி கொடுக்க முத்துப்பாண்டி எங்க அம்மாவை வர சொல்லு என்று சொல்கிறான்.


பிறகு ரத்னா உள்ளே வந்து பாக்கியத்திடம் விஷயத்தை சொல்லி அண்ணா கிட்ட கேட்காமல் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்ல பிறகு சண்முகத்துக்கு தகவல் கொடுக்க அவன் நான் பதனி வாங்கிட்டு வந்துடறேன்  என்று போனை வைக்கிறான். உடனே பரணி சண்முகத்துக்கு போன் செய்து அப்பா வந்து கூப்பிடும் வரை அம்மாவை அனுப்பாதே என்று சொல்லி போனை வைக்கிறாள். 


வீட்டிற்கு வந்த ஷண்முகம் முத்துபாண்டியை கலாய்த்து விட்டு வீட்டிற்கு வந்து பாக்கியத்துக்கு பதனியை ஊற்றி கொடுத்து எவ்வளவு வேணா அடிக்கலாம், பிறகு வந்து கூப்பிட்டா உடனே கிளம்பிடனும். நமக்கு என்ன ரோஷமாக இருக்கு என்று சண்முகம் குத்தலாக பேச பாக்கியம் இப்போ நான் என்ன தான் பண்ணனும் என்று கேட்க மாமா வந்து கூப்பிடும் வரை நீ போக கூடாது, அந்த வீட்டிற்கு போனா நீ மரியாதையோடு இருக்கனும், அதுக்கு இது ஒன்னு தான் வழி என்று சொல்கிறான். 


இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.