சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களை இணையத்தில் கேள்வி கேட்பது என்பது நெட்டிசன்களுக்கு மிக பெரிய பொழுதுபோக்கு. பல சமயங்களில் அது எரிச்சல் கொடுக்கும் கேள்விகளாகவும் இருந்துவிடுவதுண்டு. சில நேரங்களில் அந்த பிரபலங்கள் அவர்களுக்கு தக்க பதிலும் கொடுத்து இருக்கிறார்கள் . தற்போது பிரியா பவானி ஷங்கர்-நெட்டிசன்கள் வாக்குவாதம் கடுமையாக களம் 8-இல் (இணையதளத்தில்) கடுமையாக போய்கொண்டிருக்கிறது. இப்போது அது வைரலாகவும் மாறிவிட்டது. ஆட்சி ஏற்பது தொடர்பாக, ஊடகத்தில் பணியாற்றியபோது, பிரியா பவானி ஷங்கர் பதிவிட்ட முந்தைய பதிவு ஒன்றை எடுத்து, அவரை ஒரு தரப்பிற்கு ஆதரவாளராக சித்தரிக்க நெட்டிசன் ஒருவர் முயற்சிக்க, அதற்கு பிரியா பதிலளித்து வருவது தான் இன்றயை ஹாட் டாபிக். 


பெரிய CID... ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் பத்திரிகையாளராக இருந்திருக்கேன். என் வேலையே அதுதான் இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும் என பிரியா பதிலளிக்க, அவ்வளவு தான் அவருக்கு எதிரா ஒரு கோஷ்டி கோதாவில் இறங்கிட்டாங்க. 





காலையில் இருந்து நெட்டிசன்கள் இவரின் ட்விட்டர் பக்கத்திலே குடி இருந்துவிட்டார்கள் போலும் மீண்டும் ஒருவர் "மேடம் இன்னும் 5 வருஷத்துல redgiantmovies, sun pictures, cloud nine movies இதர பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கணும்ல பதறத்தானே செய்வாங்க" என்று ட்வீட் செய்து இருந்தார் .





இதற்கு மிக அழகான பதிலை தட்டிவிட்டுள்ளார் பிரியா " ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு strategy இல்ல" என்று தக்க பதிலை வழங்கினார் .