வாடிவாசல் படத்தின் இசையமைப்பாளரும் பிரபல நடிகருமான ஜி.வி. பிரகாஷ். சூரரைப்போற்று வெற்றிக்கு பிறகு சூர்யா மற்றும் ஜி.வி. பிரகாஷ் இணையும் அடுத்த திரைப்படம் தான் "வாடிவாசல்". 






இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்க, கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்கிறார். சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியின் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சி.சு.செல்லப்பா என்பவர் எழுதிய வாடிவாசல் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்படும் என்று இயக்குநர் வெற்றிமாறன் முன்பே கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வாடிவாசல் படத்தை தொடர்ந்து 'நவரசா' என்ற ஆந்தாலஜி படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பாண்டியராஜன் படம் முடிந்த பிறகு வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியானது. வாடிவாசல் படம் முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இருக்கக்கூடும் என்றும் கடந்த வருடம் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் அனைவருக்கும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 





இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இசையில் தற்போது வாடிவாசல் உள்பட 9 படங்கள் உருவாகி வருகின்றது. சூரரைப்போற்று படத்திற்கு பிறகு தனது நடிப்பில் வெளியான வணக்கம்டா மாப்ள மற்றும் தலைவி ஆகிய திரைப்படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாடிவாசல் திரைப்படம் அவர் இசையில் வெளியாகவுள்ள 75வது திரைப்படம் என்று ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. 





ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்திற்கு இசையமைக்கும்போது அவருக்கு வயது 19 என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குசேலன், தளபதி விஜயின் தலைவா, தல அஜித்தின் க்ரீடம் என்று பல முன்னணி நடிகர்களுடன் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றியுள்ளார். கடந்த 16 ஆண்டுகளில் இவர் 65க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.


இந்நிலையில் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் அப்டேட் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு ஜி.வி. பிரகாஷ் ட்விட்டர் பக்கத்தில் கொடுத்துள்ள இந்த அப்டேட் சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது என்றால் அது மிகையல்ல. ஏற்கனவே தொடர் வெற்றிப்படங்களால் குதூகலத்தில் இருக்கும் வெற்றி மாறனுக்கு இந்த இந்த படமும் பெரிய அளவில் வெற்றியை தரும் என நம்புகிறார். அவரது நம்பிக்கையை வாடிவாசல் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.