ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் நாளை மே 14 ஆம் தேதி வெளியாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சவால்களை கடந்து வெளியாக இருந்த இப்படம் ரிலீஸின் இறுதிகட்டத்திலும் சில சிக்கல்களை சந்தித்து வருகிறது. கருப்பு படத்தை பல்வேறு திரையரங்குகள் நீக்கி வருகிறார்கள். இதனால் படம் நாளை வெளியாகுமா என்கிற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
கருப்பு திரைப்படத்திற்கு முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இப்படத்திற்கான முன்பதிவுகள் இரண்டு நாட்கள் முன்பு தொடங்கியது. ஆனால் தற்போது வருமாண பங்கீடு தொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் இப்படத்தை திரையிட இருந்த திரையரங்குகள் படத்தை நீக்கி வருகின்றன. இதனால் நாளை சொன்ன தேதிக்கு கருப்பு திரைப்படம் வெளியாகுமா என ரசிகரக்ள் பதற்றத்தில் இருந்து வருகிறார்கள்.
ஆர் ஜே பாலாஜி விளக்கம்
இது குறித்து கருப்பு படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி விளக்கமளித்துள்ளார் " அன்பான ரசிகர்களே, தற்போதைய சூழ்நிலைக்கு என்னிடம் உறுதியான பதில் இல்லை. தடைகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் படத்துக்கு எப்பொழுதும் தடைகள் உண்டு, எப்படியோ கடவுள் அதையெல்லாம் கடந்து 32 மாதங்களுக்குப் பிறகு இங்கே இருக்கிறோம். இந்த முறையும் அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான்.
கருப்பு நாளைக்கு காலைல செமயா ரிலீஸ் ஆகும்..!!! நம்பிக்கை வைக்க, நடக்கும்...! " என பதிவிட்டுள்ளார்
