சூர்யாவின் ‘கருப்பு’ பட ரிலீஸ்... கருப்பு சட்டையில் ரசிகர்கள் மாஸ் என்ட்ரி...
சூர்யாவின் “கருப்பு” திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, கோவை துடியலூரில் ரசிகர்கள் பால் அபிஷேகம், பட்டாசு வெடித்து, கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

கருப்பு திரைப்படம் நேற்று (மே.15) திரையரங்குகளில் வெளியானதை முன்னிட்டு, சூர்யா ரசிகர்கள் கோவையில் உற்சாக கொண்டாட்டத்தில் நடித்துள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா, த்ரிஷா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள “கருப்பு” திரைப்படம் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில காரணங்களால் திரைப்பட வெளியீடு தாமதமானது. பின்னர் இன்று திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, சூர்யா ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பகுதியில் உள்ள முருகன் தியேட்டர் திரையரங்கில் ரசிகர் மன்றத்தினர் சிறப்பு கொண்டாட்டம் நடத்தினர். திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த சூர்யாவின் பேனருக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பலர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் திருநீறு பூசி “கருப்பா... கருப்பா...” என முழக்கமிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் ரசிகர்கள் கொண்டாடினர். அப்போது ரசிகர் ஒருவர் ஆபத்தான முறையில் பட்டாசை கையில் பிடித்தபடி சுழற்றியதால் அருகில் இருந்தவர்கள் அச்சத்தில் இருந்து விலகிச் சென்றனர். எனினும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. “கருப்பு” திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















