Just In

Mareesan Teaser: மாஸாக ரிலீசான மாரீசன் டீசர்! வடிவேலு - பகத் ஃபாசில் காம்போ எப்படி இருக்கு?

Thug Life: அடுக்கடுக்கான சர்ச்சையில் தக் லைஃப் - கடும் அப்செட்டில் இயக்குநர் மணிரத்னம்!

Priyanka Deshpande: கல்யாணம் ஆன இரண்டே மாதத்தில் பிரியங்காவுக்கு இப்படியா ஆகணும்! அவரே வெளியிட்ட புகைப்படம் - வருந்தும் ரசிகர்கள்!

ஒரு நாளைக்கு 12 பீர்.. டாக்டருடன் அத்து மீறிய உறவு - படு ஜோராக வாழ்ந்து 45 வயதில் மறைந்த கலாபவன் மணியின் மறுபக்கம்!

இந்தியாவின் சிறந்த நடிகர் இவர்தான் - செல்வராகவன் சொன்னது யாரை தெரியுமா..?
பண மோசடி செய்ததாக பாடலாசிரியர் பா விஜய் மீது பரபரப்பு புகார்!
Surekha Vani: திடீரென மொட்டை அடித்து ஷாக் கொடுத்த விஜய் பட நடிகை..! வெளியான காரணம்!
Surekha Vani: சுரேகா வாணி மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Continues below advertisement

நடிகை சுரேகா வாணி
Surekha Vani: ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சுரேகா வாணி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான துணை நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அம்மா ரோல்களில் நடித்த சுரேகா வாணி தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளார். தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக சுரேகா வாணி நடித்துள்ளார். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்திருப்பார். தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலாபாலுக்கு அம்மாவாகவும், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ்.பாஸ்கருக்கு மனைவியாகவும் நடித்திருப்பார்.
இதுமட்டுமில்லாமல் விஜய் நடித்த மெர்சல், அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட படங்களிலும் நடிகை சுரேகா வாணி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். இவருக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கும் நிலையில் கடந்த 2019ம் ஆண்டு சுரேகா வாணியின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தற்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுரேகா வாணி தனது மகளுடன் ரீல் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுரேகா வாணி வெளியிட்ட வீடியோ ஒன்று அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோவை சுரேகா வாணி பகிர்ந்துள்ளார். அதை பார்த்தவர்கள் என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சுரேகா வாணி மொட்டை தலையுடன் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது சுரேகா வாணி தனது மகளுடன் இணைந்து திருப்பதிக்கு சென்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Amaithi Padai: ”அரசியலின் மறுபக்கத்தை கூறிய நாகராஜ சோழன் எம்.எல்.ஏ.” - 30வது ஆண்டில் அமைதிப்படை
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.