பொன்னியின் செல்வன் 'வீரா ராஜ வீரா' பாடல் காப்புரிமை வழக்கு...ரஹ்மானுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
பொன்னியின் செல்வன் 2 'வீரா ராஜ விரா' பாடல் காப்புரிமை தொடர்பான ரஹ்மானுக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது

வீரா ராஜ வீரா பாடல் தாகர்பானி மரபிசையில் இருந்து உருவாக்கப்பட்டதாக ரஹ்மான் தரப்பு ஒப்புக்கொண்டாலும் தாகர்பானி கலைஞர்களை ஏ ஆர் ரஹ்மான் மற்றும் படதயாரிப்பு நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் பாடல் காப்புரிமை சர்ச்சை
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் 2 வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீரா' பாடல் . இந்த படத்தில் இடம்பெற்ற ' வீரா ராஜ வீரா' பாடல் சிவா ஸ்துதி என்கிற பாடலை மையமாக வைத்து இசையமக்கப்பட்டதாகவும் அனுமதியின்றி ரஹ்மான் இந்த பாடலை பொன்னியின் செல்வன் 2 படத்தில் பயண்படுத்தியுள்ளதாக கூறி பாரம்பரிய இசைக்கலைஞர் உஸ்தாத் ஃபயஸ் வசிஃபுத்தீன் டாகர் கடந்த 2023 ஆம் ஆண்டு ரஹ்மானுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ரஹ்மானுக்கு ரூ 2 கோடி வழங்க உத்தரவிட்டது. இந்த வழக்கை எதிர்த்து ரஹ்மான் மேல்முறையீடு செய்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
ரஹ்மானுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
இன்று வெள்ளிக்கிழமை பிப்ரவரி 13 ஆம் தேதி தலைமை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோரது அமர்வின் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ரஹ்மான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அப்போது பேசிய நீதிபதி 'வீரா ராஜ வீரா பாடல் தாகர்பானி இசை மரபில் இருந்து உருவாக்கப்பட்டதாக ரஹ்மான் ரஹ்மான் ஒப்புக்கொண்டாலும் அந்த பாடல் முதல் முதலில் தாகர்பானி வம்சாவளிகளை சேர்ந்தவர்களால் இசைக்கப்பட்டதையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறினார். இந்த பாடலை யார் இசைக்க வேண்டும் என்பதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பாடல் உருவாக்கத்திற்கான அடிப்படை அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த இசை சங்கீத சாஸ்திரங்களில் இல்லாமல் இருந்தால் இதனை அடிப்படையாக வைத்து ரஹ்மானால் அந்த பாடலை உருவாகியிருக்க முடியாது அல்லவா ? ரஹ்மான் ஒரு தொழில்முறை இசைக்கலைஞர். அவர்கள் பாரம்பரியமாக பாரம்பரிய இசையை வணங்குபவர்கள். உங்களுடன் அவர்கள் போட்டிக்கு வரவில்லை. அவர்கள் கொஞ்சம் மரியாதை மற்றும் அங்கீகாரத்தை விரும்புகிறார்கள்," என்று நீதிபதி பாக்சி கூறினார்.






















