Yesudas songs | கண்களை சொக்க வைக்கும் யேசுதாஸின் குரல் - இதோ ப்ளேலிஸ்ட்!

இரவு நேரத்தில் கேட்ககூடிய கே.ஜே.யேசுதாஸின் பாடல்கள் என்னென்ன?

Continues below advertisement

தமிழ் திரையுலகில் பல அழகான பாடல்களை பாடியவர் யேசுதாஸ். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்,இந்தி உள்ளிட்ட பல மொழிகள் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இவர் பாடியுள்ளார். அத்துடன் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 8 முறை வென்றுள்ள ஒரே பாடகர் இவர் தான். இத்தகைய சிறப்பு மிக்க யேசுதாஸின் குரலில் அமைந்த சில சிறப்பான தமிழ் பாடல்கள் என்னென்ன?

Continues below advertisement

1. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்:

1978ஆம் ஆண்டு வெளி வந்த முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. யேசுதாஸின் குரல் பாடலுக்கு இன்னும் அழகு சேர்த்திருக்கும். 

"அழகு மிகுந்த
ராஜகுமாரி மேகமாக
போகிறாள் ஜரிகை
நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்

பள்ளம் சிலா்
உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி..."

 

2. கண்ணே கலைமானே:

கண்ணாதாசனின் கடைசி திரைப்பாடலுக்கு இசையமைத்தவர் என்ற பந்தமும் இளையராஜாவிற்கு உண்டு. அந்தப்பாடலிலும் இளையராஜா,கண்ணதாசன், யேசுதாஸ் கூட்டணி கலக்கி இருக்கும். கண்ணே கலைமானே பாடல் கேட்கும் போது அவ்வளவு மன அமைதி கிடைக்கும். 

"காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி..."

 

3. ஆகாய வெண்ணிலாவே:

அரங்கேற்ற வேளை படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இளையராஜாவின் இசையில் யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் இந்தப் பாடலை பாடியிருப்பார்கள். 

"தேவார சந்தம் கொண்டு
தினம்பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு
தலைவாசல் வந்ததின்று..."

 

4. கல்யாண தேன் நிலா:

மௌனம் சம்மதம் திரைப்படத்தில் அமைந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. இளையராஜாவின் இசை மற்றும் யேசுதாஸின் குரல் சிறப்பாக அமைந்திருக்கும்.  இந்தப் பாடலை யேசுதாஸ் உடன் இணைந்து பாடகி சித்ரா பாடியிருப்பார். இவர்கள் இருவரின் குரல் மற்றும் பாடலின் வரிகள் கூடுதல் சிறப்பாக இருக்கும். 

"தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்பு
காதலா எந்நாளும்
கூடலா பேரின்பம்
மெய்யிலா நீ தீண்டும்
கையிலா... "

 

5. எந்தன் நெஞ்சில் நீங்காத:

1993ஆம் ஆண்டு வெளிவந்த கலைஞன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இப்பாடலை யேசுதாஸ் உடன் இணைந்து ஜானகி பாடியிருப்பார். இந்தப் பாடல் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும். 

"உதடுகள் உரசிடத்தானே
வலிகளும் குறைந்திடும் மானே

நான் சூடும்
நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே.."

 

இவை தவிர மாசி மாசம், பச்சை கிளிகள், பூவே பூச்சூடவா போன்ற பல சிறப்பான பாடல்களை பாடியுள்ளார். அவற்றை அடிக்கினால் ஒரு நாள் பத்தாது. 

மேலும் படிக்க:  தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

Continues below advertisement
Sponsored Links by Taboola