சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களிடம் முன்பனம் பெற்றுள்ளார் சிவகார்த்திகேயன். பராசக்தி படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கவிருந்த படத்தில் சிவகார்த்திகேயன்  நடிக்க இருந்தார். ஆனால் இதனிடையில் கமல் தயாரிப்பில் சேயோன் படத்திற்கு அவர் கமிட் ஆகியுள்ளது இரு தயாரிப்பு நிறுவனங்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

தயாரிப்பாளர் நடிகர் என தமிழ் சினிமாவில் லைம்லைட்டில் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவரது தயாரிப்பில் வெளியாகியுள்ள தாய்கிழவி திரைப்படம் பாசிட்டிவான விமர்சனத்தைப் பெற்று வசூலை குவித்து வருகிறது. இப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் அடுத்து சேயோன் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. செயோன் படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் தயாரிப்பாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

தயாரிப்பாளர்களை அலைகழிக்கும் சிவகார்த்திகேயன் 

சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு அயலான் திரைப்படம் வெளியானது. பணபிரச்சனையால் இந்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களில் படம் நடித்து தருவதாக சிவகார்த்திகேயன் முன்பணம் பெற்று அயலான் படத்தை ரிலீஸ் செய்தார். சத்யஜோதி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார். இப்படியான நிலையில் தான் பராசக்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பராசக்தி படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிவகார்த்திகேயனை இந்த படத்தில் நடிக்க அனுமதித்தனர். 

Continues below advertisement

40 கோடி சம்பளம் போதாது 

கடந்த ஜனவரி மாதம் பராசக்தி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தபடியாக வெங்கட் பிரபு படத்தில் எஸ் கே நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சேயோன் படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் 60 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அதே நேரத்தில் வெங்கட் பிரபு படத்திற்கு அவருக்கு 40 கோடி சம்பளம் பேசப்பட்டிருந்தது. 120 நாள் படப்பிடிப்பு கால்ஷீட் கேட்டார் வெங்கட்பிரபு. ஆனால் 60 நாள் நடிக்கும் சேயோன் படத்திற்கு 60 கோடி என்றால் 120 நாள் படப்பிடிப்புற்கு 40 கோடி சம்பளம் போதாது என்று கூறியுள்ளதாக சித்யா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் மீது தயாரிப்பாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.