ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமேசான் பிரைம் நிறுவனம் படத்திற்கான ஓடிடி ஒப்பந்தத்தை ரத்து செய்தது . இதனால் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டது. ஜனநாயகன் படத்தை வெளியிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
தனது எக்ஸ் பக்கத்தில் சிவகார்த்திகேயன் "ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் பேரார்வம், இரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படுகிறது - தயவுசெய்து திருட்டுப் பிரதிகளைத் தவிர்க்கவும். திரையரங்குகளில் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கேயே பார்க்கவும். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமையாளர்களை மதியுங்கள். கடின உழைப்பை மதியுங்கள். சினிமாத் துறையை மதியுங்கள்." என பதிவிட்டுள்ளார்
