இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோடில் விஜயா,மீனாவிடம், ”நாளை பொண்ணுவீட்டுக்காரங்க வராங்க வடை பஜ்ஜி எல்லாம் செய்யனும் என்கிறார். முத்துவை நாளை இங்கு இருக்க வேண்டாம்னு சொல்லு, அவன் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டான் என்கிறார்”. இதை கேட்ட முத்து,  ”நான் கூட நாளைக்கு சவாரி போகலாம்னு தான் நெனச்சேன். ஆனா எல்லாத்தையும் கேன்சல் பன்னிட வேண்டியது தான்” என்கிறார். 


ஸ்ருதி- கிரிஷ்:


இதையடுத்து ஸ்ருதியின் அப்பா தன் மனைவிடம், பிஜூவின் அப்பாவிடம் பேசிவிட்டதாகவும் நாளை ஸ்ருதியை அழைத்து சென்று ஒரு மேரேஜ் பேசி முடிச்சிடலாம் என்றும் கூறுகிறார். ஹாலுக்கு வரும் ஸ்ருதி ”இன்னைக்கும் இட்லியா? என சலித்துக் கொள்கிறார். உடனே ஸ்ருதியின் அப்பா, “நாளை ஒரு நல்ல கேரளா புட் சாப்பிடலாம்” என்கிறார். ஸ்ருதி, ”எனக்கு நாளை டப்பிங் இருக்கிறது என்னால் வர முடியாது” என்கிறார். பின் ஸ்ருதியின் அப்பா அவரை சம்மதிக்க வைத்து விடுகிறார். 


கல்யாணி (ரோகினி) தன் மகன் க்ரிஷ்ஷிற்கு உணவு ஊட்டி விடுகிறார். உடம்பு இப்போ ரொம்ப நல்லா இருக்கு என்கிறார் கல்யாணியின் அம்மா. மேலும் ”நான் ஊருக்கு கெளம்பவா” என கேட்கிறார். அதற்கு கல்யாணி, ”எதுக்கும் மறுபடியும் போயி மயங்கி விழவா? என்கிறார். உடனே கல்யாணியின் தோழி ”அவங்க இங்கேயே இருக்கட்டும். க்ரிஷ்ச இங்கேயே எதாவது ஒரு ஸ்கூல்ல சேர்த்திடலாம்” என்கிறார் . 


கல்யாணி தோழி:


கல்யாணி, ”நீ இங்கேயே இருந்து என்வீட்ல இருக்கவங்க கண்ணுல நீ பட்டு நான் மாட்டிக்கனுமா?”. ’கல்யாணத்துக்கு அப்றம் கூட நீ க்ரிஷ் பத்தி யோசிக்காம சுயநலமா யோசிக்குற’ என்கிறார் கல்யாணியின் அம்மா. ”பிடிக்காத நரகத்துல நீ என்ன பிடித்து தள்ளினதுனால தான் நான் இந்த நிலைமையில் இருக்கேன்.கல்யாணி, தன் அம்மாவிடம், எப்போ வீட்டுக்கு உண்மை தெரிஞ்சிடுமோனு பயந்து பயந்து ஓடிக்கிட்டு இருக்கேன் என்கிறார். 


கல்யாணியின் தோழி, கல்யாணியை பார்த்து இவ பெரிய எடத்து பொண்ணுனு நெனச்சி அவங்க மாமியார் தாங்குறாங்க. மலேசியா  இதெல்லாம் உருட்டுனு தெரிஞ்சுதுனா இவள உருட்டி, உருட்டி அடிப்பாங்க என்கிறார். கல்யாணியின் அம்மா ”உன்னை பத்தின உண்மைய முத்து மீனா கிட்டயாச்சி சொல்லிடு. நான் பேசட்டுமா” என்கிறார். உடனே கோபமடைந்த ரோகினி கையில் இருந்த பீங்கான் தட்டை தூக்கி கீழே அடிக்கிறார். ”அதுக்குனு ஒரு டைம் வரும் அப்போ நான் சொல்லிக்குறேன் என்கிறார் கல்யாணி. 


வரன் பார்க்கும் படலம்:


மீனா இன்னொரு இட்லி வைக்கட்டா என்றதும், முத்து வேண்டாம் அண்ணி டைம் ஆச்சி என்கிறார்.விஜயா,  உனக்கு பொண்ணு பார்க்குறோம்னு சொல்லி இருந்தேன் இல்ல. இன்னைக்கு பொண்ணு வீட்ல இருந்து வராங்கா என்கிறார். உடனே ரவி நான் தான் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டானு சொன்னே இல்லமா என்று சொல்லி விட்டு எழுந்து செல்கிறார். எங்கடா போற, நான் பார்த்து இருக்குறது பெரிய எடத்து பொண்ணுடா என்கிறார். 


உடனே மனோஜ் அம்மா ஒரு சாதாரண சமையல்காரனுக்கு எப்டிமா பெரிய இடத்து பொண்ணு தருவாங்க என கேட்கிறார். உடன முத்து உனக்கு என்ன சமைக்குறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்ல. எவ்ளோ கஷ்டம் தெரியுமா?  என்கிறார். உடனே அண்ணாமலை சமையல் புனிதமான தொழில் என்கிறார். அதுக்கு இல்லபா மிடில் கிளாஸ் பேமிலியா பார்க்கலாம் என்கிறார் மனோஜ். டே ரவி அவங்க யாரை வேண்டும் என்றாலும் பார்க்கட்டும் எந்த குடும்பமா இருந்தாலும் நம்ம அப்பாவுக்கு மரியாதை கொடுக்குற குடும்பமா இருக்கனும் என்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.