இளம் பின்னணி பாடகர்களில் ஒருவரான பிரகதி குருபிரசாத் தனது அழகான குரல் மற்றும் அவரது அழகான தோற்றத்தினால் மிகவும் பிரபலமானவர்.இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கென்ற தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 


சிங்கப்பூரில் பிறந்த 22 வயதான பாடகி பிரகதி குருபிரசாத், கலிபோர்னியாவில் வளர்ந்தவர். இவர் கடந்த 2012 ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தை பிடித்தார். அதன்பிறகு, தமிழ்நாட்டை தன் தாய்வீடாக மாற்றிக்கொண்டார். 






அன்றிலிருந்து இன்றுவரை பிரகதிக்கு உலகம் முழுவதும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மாடலாக மாறிய இந்த பாடகி, சில சிஸ்லிங் பிகினி உடையில்  புகைப்படம் எடுத்து தனது ரசிகர்களை கிறங்கடிக்கிறார். தற்போது அதேபோல், மீண்டும் ஒரு புகைப்படத்தை பிரகதி வெளியிட்டநிலையில், அது படுவைரலாகி வருகிறது. 






அவர் சமீபத்தில், கையில் செல்போனுடன் கருப்பு நிற உடையணிந்து எடுத்து வெளியிட்ட புகைப்படம்தான் ட்ரெண்டிங் நம்பர் 1. சரியாக 3 மணி நேரத்திற்கு முன்பாக அவர் இந்த புகைப்படத்தை வெளியிட, அதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண