நடிகர் ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை பாடகி கெனிஷா சந்தித்து வருகிறார். அண்மையில் கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி குறித்து அவதூறான கருத்துக்கள் பகிரப்பட்டன. மேலும் அர்த்தி குறித்து கெனிஷா கருத்து தெரிவிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் பொய் என்றும் தனக்கு அப்படி எந்த ஒரு உத்தரவும் வரவில்லை என்றும்  கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

கெனிஷாவின் வேதனை நிறைந்த கடந்த காலம் 

" என் பெற்றோர்களுக்கு நான் ஒரே குழந்தை . என் அம்மா 2013 ஆம் ஆண்டு இறந்தார். என் தந்தை 2017 ஆம் ஆண்டு உயிரிழந்தார். என்னுடைய 4 வயதில் இருந்து என் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனக்கு 18 வயதில் திருமணம் நடந்தது. என் கணவருடம் 10 பெண்கள் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு உறவில் இருந்தார்கள். இந்த நபருடன் நான் வெறும் 4 மாதங்கள் மட்டுமே திருமண உறவில் இருந்தேன். இந்த நபர் என்னை செய்த கொடுமையில் என் பனிக்குடம் உடைந்து என்  வயிற்றில் இருந்த குழந்தை வெளியே வந்தது. இதை எல்லாம் கடந்து அடுத்த பத்து ஆண்டுகளில் நான் சுயமாக என் சொந்த காலில் நின்றேன். ஆமான் நான் 500 ரூபாய் சம்பளத்திற்காக தான் என் பயணத்தை தொடங்கினேன். இன்று நான் பெரிய சம்பளத்திற்கு இசை நிகழ்ச்சிகளில் பாடும் நிலைக்கு வந்திருக்கிறேன். இந்த வளர்ச்சியை அடைவதற்காக நான் சமரசங்கள் செய்தேன் என யாரும் என்னை குறை சொல்ல முடியாது.

உளவாளி வைத்து கண்காணிக்கிறார்கள் 

ஆனால் சமீபத்தில் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் என்னை பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். ஆனால் ஒருவர் எதுவும் பேசவில்லை என்பதற்காக நீங்கள் என்ன வேண்டுமானால் பேசுவீர்களா. ஆனால் கடந்த சில மாதங்களில் என்னை எல்லாரும் தாக்குகிறார்கள். என்னை தாக்குபவர்கள் பெங்களூருவிற்கு டிடெக்டிவ் அனுப்பி என்னுடைய கடந்த காலத்தை விசாரிக்கிறார்கள். எனக்கு யாருடன் திருமணம் ஆனது என்பதை அவர்கள் விசாரிக்கிறார்கள். என் தந்தையை நான் ஹோமில் சேர்த்திருப்பதாக தகவல் பரப்புகிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னைச் சுற்றி இருந்த விமர்சனங்கள் காரணமாக நான் எந்த நிகழ்ச்சியிலும் நான் பாடவில்லை. இப்படியான சூழலில் தான் நான் கேரளாவில் மீன்குளத்தி அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். 8000 பேர் அந்த நிகழ்வில் என்னுடன் இணைந்து பாடினார்கள்.

Continues below advertisement

ஆர்த்திக்கு எதிராக பேச தடை உத்தவு வரவில்லை

இது நடந்த அடுத்த நாள் என்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அதை யார் ஹேக் செய்தது என்பதை நானும் என்னுடைய டீமும் இணைந்து கண்டுபிடித்துள்ளோம். ஆனால் அடுத்த நாளே நான் ஆர்த்திக்கு எதிராக பேசக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டதாக மீடியாக்கள் செய்தி வெளியிடத் தொடங்கின. அப்படியான ஒரு உத்தரவே எனக்கு வரவில்லை. இந்த உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் நடந்து வருகின்றன. ஒரு அழகனான நபர் நமக்கு முதலமைச்சராக கிடைத்திருக்கிறார். மக்கள் எண்ணெய் தட்டுப்பாட்டால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆனால் இதை எல்லாம் கடந்து ஒருவர் தன்னுடைய தாழ்வுமனப்பான்மை காரணமாக தன்னைப் பற்றி எல்லாரும் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். தன்னுடைய பிரச்சனையை தனது குடும்பத்திடமோ , சினிமாவைச் சேர்ந்த நண்பர்களிடமோ சொல்ல முடியாமல் என்னை மாதிரியான ஒரு பெண்ணிடம் வந்து சொன்னார் என்றால் என் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் எங்கள் இடையில் இருக்கும் அழகான நட்பை நான் ஏன் முடித்துக் கொள்ள வேண்டும் . உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாததால் ஏன் உங்களுடன் சேர்த்து மற்றவர்களின் வாழ்க்கையையும் சேர்த்து கீழே இழுக்கிறீர்கள். மீடியா வெளியிட்டது போல் எனக்கு நீதிமன்றத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. " என கெனிஷா பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.