ஜெயம் ரவி 


பாடகி கெனீஷாவுடனான தொடர்பே ஜெயம் ரவி ஆர்த்தி திருமண விவாகரத்திற்கான காரணம் என பரவலாக பேசப்பட்ட நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் கெனீஷா வெளிப்படையாக பேசியுள்ளார். ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரே இந்த விவாகரத்திற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். 


ஆர்த்தி பற்றி கெனீஷா


DT NEXT பத்திரிகைக்கு கெனீஷா அளித்த பேட்டியில் இப்படி கூறியுள்ளார் " நானும் ஜெயம் ரவியும் சேர்ந்து கோவாவில் சொந்தமாக அபார்ட்மெண்ட் வாங்கியிருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இதைப் பற்றி கடந்த சில நாட்களாகவே நான் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உண்மையில் நாங்கள் இருவரும் சேர்ந்து அபார்ட்மெண்ட் வாங்கியிருக்க வேண்டும் என்றுதான் எனக்கு இப்போது தோன்றுகிறது. ரவி எனக்கு ஒரு நண்பர் மற்றும் க்ளையண்ட். தனது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் வரை எனக்கு அவரைப்  பற்றி அதிகம் தெரியாது. ஆனால் அவரது மனைவி தனக்கு இந்த விவாகரத்தைப் பற்றி எதுவும் தெரியாது என அப்பட்டமாக பொய் சொல்லியிருக்கிறார். ஒரு உறவைப் பற்றி வெளியாகும் எல்லா விதமான தகவல்களும் ஊடகங்கள் பரப்புபவைதான். எங்கள் இருவருக்கும் இடையில் எதிர்காலத்தில் எதுவும் ஏற்பட்டாலும் அது ஊடகத்தின் பொறுப்புதான். 


" எனக்கும் ஜெயம் ரவிக்கும் இடையில் பிசிக்கலாக எதுவும் நடக்கவில்லை. எங்களுடைய எல்லைகள் எங்களுக்கு தெரியும். நான் பெற்றோர்கள் இல்லாமல் சுயமாக வளர்ந்தவள். ஆனால் ஜெயம் ரவியின் குடும்பம் அவருக்கு கொடுத்திருக்கும் கஷ்டத்தை பார்க்கையில் பெற்றோர்கள் இல்லாமல் வளர்வது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டமாக எனக்கு தெரியவில்லை. ஒரு மனநல ஆலோசகராக ஜெயம் ரவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரோடு  எதிர்கொண்ட கஷ்டங்களை கேட்கையில் வெறும் வலி என்று மட்டும் அதை சொல்லிவிட முடியாது. ஆணோ பெண்ணோ இவ்வளவு வலியை ஒருவர் எதிர்கொள்வது நியாயமே இல்லை . மனநல ஆலோசனையின் போது ஜெயம் கூறியவற்றை நான் என்னுடைய டைரியில் எழுதி வைத்திருக்கிறேன். தேவைப்பட்டால் ஆர்த்திக்கு எதிரான ஆதாரங்களை என்னால் நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் நான் தயார். தான் செய்த தவறுகளை மறைக்க அர்த்தி என்னை பலியாடாக பயன்படுத்தக்கூடாது. கடந்த ஒரு மாத காலமாக ஆர்த்தி ஜெயம் ரவியின் இமேஜை சிதைக்கவும் அவரது வங்கி கணக்கை முடக்கவும் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும். இது ஒன்றும் சர்க்கஸ் இல்லை இதில் என்னால் போராடிக் கொண்டிருக்க முடியாது. இதற்கு மேலும் இந்த வதந்திகள் தொடர்ந்தால் மான நஷ்ட வழக்கு தொடரவும் நான் தயார்" என்று கெனீஷா கூறியுள்ளார்