“இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
என்னைப் பற்றியும் எனது கணவர் பற்றியும் தவறான வதந்தி பரப்பாதீங்க என்று பாடகி கல்பானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்னைப் பற்றியும் எனது கணவர் பற்றியும் தவறான வதந்தி பரப்பாதீங்க என்று பாடகி கல்பானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளார்.
Just In




இதனிடையே கல்பனாவின் மகள் தனது தாய் தற்கொலை முயற்சி செய்யவில்லை எனவும் தினமும் எடுக்கும் மருந்தின் அளவு சற்று அதிகமாகிவிட்டது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாடகி கல்பனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வணக்கம் நான் உங்கள் கல்பனா ராகவேந்தர். என்னை பற்றியும் எனது கணவர் பற்றியும் மீடியாவுல ஒரு தவறான வதந்தி பரப்பிக்கொண்டு இருப்பதால் அதைப்பற்றி விளக்கம் கொடுக்கத்தான் இந்த வீடியோ வெளியிடுகிறேன்.
இந்த வயசுல நான் பிஎச்.டி, எல்.எல்.பி என நிறைய விஷயங்கள் படித்துக்கொண்டு இருக்கிறேன். மியூசிக்லையும் ரொம்ப தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றேன். இதில் ரொம்ப மன அழுத்தம் ஏற்பட்டதால் பல வருடங்களாக எனக்கு தூக்கம் சரியா இல்லை. இதன்காரணமாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அப்போது மருந்துகள் கொடுத்தனர். அதில் கொஞ்சம் டோஸ் அதிகமானதால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுயநினைவை இழக்கும் தருணத்திற்கு சென்றுவிட்டேன்.
இன்று நான் உயிரோடு திரும்ப வந்து உங்களிடம் பேசுகிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் என் கணவர் அன்று பட்ட பாடுதான். என்னை காப்பாற்ற அவர் பட்ட கஷ்டம் அவ்வளவு. அப்போது அவர் வெளியூரில் இருந்தார். என் கணவர்தான் போலீஸ், மீடியா, ஆம்புலன்ஸ் என எல்லாரையும் ஒருங்கிணைத்து என்னை சரியான நேரத்துக்கு மருத்துவமனையில் சேர்க்க உதவினார்.
அதனால் எந்த வதந்திகளையும் நம்பாதீங்க. என் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. கடவுளின் அனுகிரகத்தோடு என் வாழ்க்கையில் கிடைத்த அழகான விஷயம் பிரசாத் பிரபாகர் எனக்கு கணவராக கிடைத்தது. இவ்வளவு அன்பு இருக்குற தயா பிரசாத் என் மகளாக கிடைத்தது.
அதனால் தப்பான வதந்திகளை நம்பாதீங்க. இந்த நேரத்தில் போலீசாருக்கும் எனது ரசிகர்களும், என் உடன் வேலை பார்ப்பவர்களுக்கும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு வேண்டிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த அன்புக்கு நன்றி.
சீக்கிரமே உங்களை பாடல் மூலமாக சந்திக்கிறேன். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள என்னை நான் தயார்படுத்திக்கொண்டு இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.