சமூக வலைத்தளங்கள் ஆக்டிவாக இருக்கும் சில நடிகர்களுள் நடிகை ஸ்ருதிஹாசனும் ஒருவர். ஸ்ருதிஹாசன் பற்றியை அறிமுகம் கோலிவுட் ரசிகர்களுக்கு தேவையில்லை. இன்ஸ்டாகிராமில் தனது அனைத்து  ஆக்டிவிட்டிஸையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் ஸ்ருதிஹாசன். இந்த உலகத்தில் தனக்கு யார் மிகவும் முக்கியம் என்பதையும் பகிர்ந்திருக்கிறார்.







ஸ்ருதி வித்தியாசமானவர் ! 


ஸ்ருதிஹாசன் மேலை நாட்டு கலாச்சாரத்தை அதிகம் பின்பற்றக்கூடிய நடிகை. அவரை எந்தவொரு பொது நிகழ்ச்சியில் நீங்கள் பார்க்க நேரிட்டாலும் கருப்பு உடையிலேயே தோன்றுவார். அது பார்ப்பவர்களுக்கு ஒரு வித்தியாச அனுபவத்தை கூட கொடுக்கலாம். ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவரை காதலித்து வந்தார். அவரை தனது அப்பா கமல்ஹாசனுக்கும் கூட அறிமுகம் செய்து வைத்தார். விரைவில் அவரை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என ரசிகர்கள் நினைத்த நிலையில் அவருடன் பிரேக் அப் செய்துக்கொண்டார்.


ஓவியருடன் காதல் !


ஸ்ருதிஹாசன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் மும்பையில் பிரபலமான ஓவியர் ஒருவருடன் அதிக நேரம் செலவிடுவதையும் , அவருடனான புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்வதையும் பார்க்க முடிந்தது. சாந்தனு ஹசாரிகா என்னும் அந்த ஓவியரைத்தான் ஸ்ருதி தற்போது டேட் செய்து வருகிறார் என செய்திகள் வெளியான நிலையில் , ஆரம்பத்தில் அவர் எனது நண்பர் என கூறிவந்த ஸ்ருதி . பின்நாட்களில் அவர் தனது காதலர் என்றும் , நான்தான் முதலில் அவருக்கு “ஐ லவ் யூ “ என கூறி என்னுடைய காதலை வெளிப்படுத்தினேன் என  பகிர்ந்திருந்தார். 2018 ஆம் ஆண்டு முதலே ஸ்ருதிஹாசனுக்கு சாந்தனுவை தெரியுமாம் . 2020 ஆம் காலக்கட்டத்தில்தான் இருவருக்குமான நெருக்கம் அதிகரித்ததாக அவரே கூறியிருக்கிறார்.






ஸ்ருதிக்கு மிகவும் பிடித்த நபர் !


ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவுடன் அதிக நேரத்தை செலவிடுவதை விரும்புகிறார். சமூக வலைத்தளங்களில் காதலருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வது வழக்கமான ஒன்றுதான். அதே போல ரசிகர்களுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலையும் ஸ்ருதி விரும்புவார். அப்படி சமீபத்தில் அவர் உருவாக்கிய கேள்வி பதில் தொகுப்பு ஒன்றில் ரசிகர் ஒருவர் “ இந்த உலகத்திலேயே உங்களுக்கு பிடித்த நபர் யார் ?” என கேட்க ,  உடனே அந்த கேள்விக்கு தனது காதலனை வீடியோவில் காட்டி , வார்த்தைகளால் பதில் சொல்லாமல் வீடியோவாகவே விளக்கிவிட்டார்.