தொழிலபதிபரை மணந்து பார்சிலோனாவில் செட்டில் ஆன நடிகை ஸ்ரேயா, இரு தினங்களுக்கு முன்பு இந்திய சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் தனக்கு கடந்த வருடமே குழந்தை பிறந்துவிட்டதாகவும், குழந்தை பிறந்து 9 மாதமாகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்கள், சினிமாத்துறையினர் இடையே இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. இவ்வளவு பெரிய ரகசியத்தை இப்படி மறைத்துவிட்டாரே என அனைவருமே ஸ்ரேயா மீது செல்லமாக கோபப்பட்டனர்.  இந்நிலையில் இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு மனம் திறந்து பேசியுள்ளார் ஸ்ரேயா. 




தன்னுடைய மகளுக்கு ராதா எனப் பெயரிட்டுள்ளார் ஸ்ரேயா.  மேலும் பேசிய அவர், என்னுடைய குழந்தை பிறந்து 9 மாதமாகிறது. நான் இனிமேலும் அவள் குறித்து  ரகசியம் காக்க எதுவுமே இல்லை. அவள் ஏற்கெனவே பல நாடுகள் சுற்றிவிட்டாள். அவள் ஒரு ட்ராவல் பேபி தான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு குழந்தை தாயைப் பெற்றெடுத்தது போல. ராதா என் சிறந்த தோழி எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த லாக்டவுனில் பார்சிலோனாவில் ராதா பிறந்துள்ளார். திட்டமிட்டு பிறந்த குழந்தைதான் ராதா. இதுதான் ஒரு குடும்பத்தை தொடங்குவதற்கான நேரமென திட்டமிட்டு முடிவெடுத்தோம். இது அழகான சுகப்பிரவசமாகவே இருந்தது. 




இப்போது படப்பிடிப்புகளில் ஆர்வம் காட்டும் ஸ்ரேயா, என்னுடைய குழந்தையை அன்பாக அரவணைக்க இங்கு ஆட்கள் உண்டு. என்னுடைய அம்மா இங்குள்ளார். அதனால் ஷூட்டிங் நேரத்தில் ராதாவை பார்த்துக்கொள்வது அவ்வளவு சிரமமாக இருக்காது என்றார்.


திரைத்துறைக்கு இடைவெளிவிட்டு இருந்த ஸ்ரேயா தற்போது நடிப்பதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.