தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சீதா சத்யா, ப்ரியா, அஞ்சலி என மூவரையும் பாத்திரம் துலக்க வைத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, ரூமுக்கு வந்த சீதா “நாளைக்கு உங்களுக்கு எக்ஸாம் நீங்க போய் நல்லபடியா எழுதிட்டு வாங்க” என்று ராமுக்கு வாழ்த்து சொல்கிறாள். அதனை தொடர்ந்து “நானும் நாளைக்கு காலேஜ் போக போறேன்” என்று சொல்ல ராம் “நீ படிக்க போறியா” என்று கேட்க, “நான் படிக்க போகல, சில்லு வண்டுகள் பாதுகாப்புக்காக போகப் போறேன்” என்று சொல்கிறாள். 


அதனைத் தொடர்ந்து மறுநாள் சீதா “நானும் உங்ககூட காலேஜ் வர போறேன்” என்று சொல்ல மகா சீதாவை திட்ட சீதா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். “நாளைக்கு நீங்க என் கூட தான் காலேஜ் வரணும்?” என ஆர்டர் போட்டு விட்டு கிளம்பி செல்ல, ஆர்டர் போட மூன்று பெண்களும் “இவங்க காலேஜ் வந்தா பிரின்சிபால் நம்மளை பத்தி எல்லாத்தையும் சொல்லிடுவாங்க” என்று பயப்படுகின்றனர். 


மறுபக்கம் அர்ச்சனா “இந்த சீதாவை இப்படியே விடக்கூடாது” என்று ஏற்றி விட, ரவுடிக்கு போன் போடும் மகா ,சீதாவின் போட்டோவை அனுப்பி “உடம்புல உயிர் இருக்கனும்.. ஆனால் ஒரு மாசத்துக்கு அவ எந்திரிக்கவே கூடாது” என சொல்ல, அர்ச்சனா 6 மாசத்துக்கு எந்திரிக்க கூடாது என சொல்கிறாள். பிறகு ராம் எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு எக்ஸாம் கிளம்ப சீதா மூன்று பேரையும் கூட்டி கொண்டு காலேஜ் கிளம்புகிறாள். 


இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.