ஒரு வீடியோ ஜாக்கியாக இருந்து தமிழ் மற்றும் மலையாள சின்னத்திரை நடிகையாக ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகை சாண்ட்ரா எமி. சிங்கம் 3, உறுமீன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ரோஜாக்கூட்டம், தங்கம், தலையணை பூக்கள் உள்ளிட்ட தொடர்களின் நடித்ததன் மூலம் பிரபலமானார்.


வி.ஜே மற்றும் நடிகரான பிரஜினை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சாண்ட்ரா எமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்ன தம்பி, அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தாள், காதலிக்க நேரமில்லை மற்றும் வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார் பிரஜின். இந்தத் தம்பதியினர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை பற்றி வெளிப்படையாகப் பேசி இருந்தனர். 


 




பிரஜின் - சாண்ட்ரா இருவரும் திருமணத்துக்குப் பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் சாப்பிடக் கூட வழியில்லாத அளவுக்கு பெரும் பண நெருக்கடியில் சிக்கித் தவித்துள்ளார். அது பற்றி அவர்கள் பேசுகையில் "நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆனால் அதை பத்தி யார்கிட்டேயும் சொல்லவே மாட்டோம். நாங்க காதலிக்கும் போதில் இருந்தே எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் வந்து ஒரு மூட்டை அரிசி எடுத்து வந்து தந்தார். 


அதே போல எங்க குழந்தைகள் பிறந்த சமயத்தில் கூட நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம். இரட்டைக் குழந்தைகளை நாங்க இரண்டு பேரும் தான் கஷ்டப்பட்டு வளர்த்தோம். எங்களுக்கு யாருமே உதவி செய்ய இல்லை. பாவம் பிரஜின் நான் கஷ்டப்படுறேன் என அவரும் நைட்ல தூங்காம கண்ணு முழிச்சு குழந்தைகளை பார்த்துக்கொள்வார். அடுத்த நாள் ஷூட்டிங் போகும்போது ட்ராபிக்கில் எல்லாம் தூங்கிவிடுகிறார் என அசிஸ்டன்ட் சொல்லுவாங்க. அதுக்கு அப்புறம் இருந்து நான் அவர் கிட்ட எதுவுமே சொல்றது கிடையாது. நானே குழந்தைகளை முடிஞ்ச வரையில் பார்த்துப்பேன். எங்க இரண்டு பேருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்ததால அதைக் கடந்து வந்துட்டோம்” எனப் பேசி இருந்தார் சாண்ட்ரா.


 




எங்க அப்பாவும் அம்மாவும் பிரிந்ததுக்கு அப்புறம் நானும் அண்ணனும் எங்க அப்பாகூட தான் இருந்தோம். எங்க அப்பா இரண்டாவது  கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னதும் அண்ணன் சரின்னு சொல்லிட்டார். நம்ம பெரியவங்களா ஆனதும் என்னோட வாழ்க்கை உங்களால் தான் நாசமா போயிடுச்சு அப்படினு சொல்லிடுவார். அதனால நீயும் அவர் கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொல்லிடு அப்படினு சொன்னார். சித்தி வந்ததுக்கு அப்புறம் நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம். நாம எப்படியாவது முன்னேறிக் காட்டணும்னு அண்ணன் சொல்வார். எனக்கு எல்லாமே என்னோட அண்ணன் தான். எனக்கு ஏதாவது ஒரு பிரச்சினைன்னா உடனே வந்து நிற்பார். 


ஒருநாள் அவர் விபத்தில் இறந்து போனார். அவர் இறந்த அடுத்த நாளே அவங்க லவ்வர் தூக்கு மாட்டிகிட்டு செத்து போய்ட்டாங்க. அதுவரைக்கும் அவங்க லவ் பண்றது வீட்ல யாருக்குமே தெரியாது. நான், அப்பா, அம்மா யாருமே அவர் கூட போகணும் என நினைக்கல, ஆனா அவங்க என்னோட அண்ணன் கூடவே செத்து போயிட்டாங்க. என்னால அதைத் தாங்கிக்கவே முடியல. என்னோட பொண்ணுக்கு அவங்க பெயரை தான் வைச்சு இருக்கோம்" என மிகவும் மன வருத்தத்துடன் பேசியுள்ளார் சாண்ட்ரா.