டோலிவுட்டின் பிரபல நடிகர் என்டிஆர்  தொகுத்து வழங்கும் எவரு மிலோ கோடிஸ்வரலு (கோன் பனேகா குரோர்பதி - தெலுங்கு அத்தியாயம்)  நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்டுள்ளார். கோடீஸ்வரன் நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சி ஆகும். பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு ரூ.1000 முதல் பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த தொகையானது ரூ.1கோடி வரை செல்லும். 


ஒவ்வொரு மொழியிலும் புகழ்பெற்ற நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள். அதன்படி தற்போது சீசனை தெலுங்கில் என் டி ஆர் தொகுத்து வழங்குகிறார். இந்த  நிகழ்ச்சியிலேயே தற்போது சமந்தா பங்கேற்றுள்ளார். விவாகரத்துக்கு பிறகான முதல் பொது நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இது தொடர்பான ப்ரோமா ஜெமினி டிவி வெளியிட்டுள்ளது. அதில் தனக்கு கொஞ்சம் பயமாக இருப்பதாக சமந்தா கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் என் டி ஆர், ஆமாம் ஏனென்றால் அது ஹாட் சீட்.. இது ஹோஸ்ட்சீட் என பதிலளிக்கிறார். இந்த ப்ரோமாவை சமந்தா ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.






நடிகை  சமந்தா கலந்து கொள்ளும் இந்த சிறப்பு நிகழ்ச்சி தசரா திருநாளின் போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முன்னதாக, அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்ற ஷூட்டிங்கில் அவர் கலந்து கொண்டதாக சினிமா வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டிருந்தாலும், விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு தற்போது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து மணந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 தொடர் முதலில் பல எதிர்ப்புகளைச் சந்தித்து, வெப்சீரிஸ் சரியான பிறகு பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தான் தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக சமந்தாவும், நாக சைதன்யாவும் சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். ஏன் விவாகரத்து என ரசிகர்கள் பலர் பல்வேறு யூகங்களை வெளியிட்ட நிலையில் அது குறித்தும் சமந்தா மன வருத்தத்தை பதிவு செய்தார். 




அதில், ''எனக்கு எதிரான வதந்திகளுக்கு எதிராக நிற்கும் அனைவருக்கும் நன்றி. என் மீதான உங்களின் அக்கறை என்னை திக்குமுக்காடச் செய்கிறது. என் மீது பல வதந்திகள் பரபப்படுகின்றன. நான் இன்னொருவர் மீது காதல் வயப்பட்டதாகவும், குழந்தை வேண்டாமென்றும் கூறியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். விவாகரத்து என்பதே வேதனையான ஒன்றுதான். தனி ஆளாக அந்தக் காயத்திலிருந்து மீள எனக்கு நேரம் எடுக்கும். இதற்கிடையே என் மீதான தொடர் வதந்திகளும், தனி நபர் தாக்குதலும் தொடர்கிறது. ஆனால் இதுவெல்லாம் என்னை ஒருபோதும் காயப்படுத்தாது'' என்று குறிப்பிட்டிருந்தார்.