நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சமந்தா  பிரிவுக்கு பாரத ராஷ்டிர சமிதியின்  (பிஆர்எஸ்) தலைவர் கே.டி. ராமராவ்  காரணமாக இருந்தார் என தெலங்கானா வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கொண்ட சுரேகா குற்றம் சாட்டியிருந்தார். அவரது கருத்திற்கு தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் நானி, ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவி, நாக சைதன்யா, சமந்தா என பெரும்பாலானோர் வன்மையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில், தற்போது அமைச்சர் கொண்ட சுரேகா, தன் கருத்தைப் பின்வாங்கிக்கொள்வதாக கூறி மன்னிப்பு கோரியுள்ளார்.


















பிரிவுக்கு காரணம் 


 நடிகர்  நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக் கொண்டார்கள். இந்த விவாகரத்திற்கான காரணங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத நிலையில் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. தற்போது தெலங்கானா வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கொண்ட சுரேகா நாக சைதன்யா மற்றும் சமந்தா  பிரிவுக்கு பாரத ராஷ்டிர சமிதியின்  (பிஆர்எஸ்) தலைவர் கே.டி. ராமராவ்தான்  காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.


இதுமட்டுமில்லாமல்  கே.டி. ராமராவ் பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகி சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதற்கும் காரணமாக இருந்தார். போதை பொருட்களுக்கு அடிமையாக இருந்த ராமராவ் பல நடிகர்களை மிரட்டியுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது நடிகர்  நாகர்ஜூனா கொண்டா சுரேகாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 


மன்னிப்பு கோரிய அமைச்சர் கொண்ட சுரேகா


அவரது கருத்திற்கு தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் நானி, ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவி, நாக சைதன்யா, சமந்தா என பெரும்பாலானோர் வன்மையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில், தற்போது அமைச்சர் கொண்ட சுரேகா, தன் கருத்தைப் பின்வாங்கிக்கொள்வதாக கூறி மன்னிப்பு கோரியுள்ளார்.