Kantara Update: காந்தாரா திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கு காந்தாரா - சாப்டர் 1 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


காந்தாரா திரைப்படம்:


ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடந்த ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம், பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. இந்தத் திரைப்படம் இந்தியாவின் தென் கடலோரப் பகுதியிலிருந்து தெய்வீக மற்றும் ஆத்மார்த்தமான கதையைக் கொண்டு வந்து பெரும் கவனம் ஈர்த்தது. இதையடுத்து, அப்படத்தில் இடம்பெற்ற கதைக்களத்திற்கு முந்தைய காலகட்டங்களில், நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு ஒரு படம் உருவாக்கப்படும் என படக்குழு அறிவித்தது. அதனடிப்படையில், காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. தெய்வீக கதையை மையமாக கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம், கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


காந்தாரா திரைப்பட அப்டேட்:


இதுதொடர்பாக படத்தை தயாரிக்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,கடந்த காலத்தின் புனிதமான எதிரொலிகளுக்குள் நுழையுங்கள், அங்கு ஒவ்வொரு இடத்திலும் தெய்வீகம் பின்னி இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாததைக் காண மயங்கி இருங்கள். இது ஒளி அல்ல, தரிசனம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இடம்பெற்றுள்ள போஸ்டரில், ”காந்தாரா A LEGEND CHAPTER" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 27ம் தேதியன்று நண்பகல் 12.25 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தையும் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்குவதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.






படம் பற்றிய கூடுதல் தகவல்:


இப்படத்திற்காக பிரமாண்டமான செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வரும்  27 ஆம் தேதி அன்று 'காந்தார அத்தியாயம் 1' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதன்பிறகு டிசம்பர் மாதத்தில் இருந்து தீவிர படப்பிடிப்பு தொடங்கும். படத்தில் இடம்பெறும் நடிகர் மற்றும் நடிகைகளின் விவரங்கள், பின்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கேஜிஎஃப் திரப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள 'சலார்: பார்ட் 1 போர்நிறுத்தம்' மூலம் பார்வையாளர்களை ஒரு அதிரடி பயணத்தில் அழைத்துச் செல்ல ஹோம்பலே பிலிம்ஸ் தயாராக உள்ளது. இப்படம் டிசம்பர் 22, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.