நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து பிரச்சனையில் பெரியளவில் விமர்சனத்திற்கு ஆளானவர் பாடகி கெனிஷா. விவாகரத்தை அறித்த பின்னார் ரவி மோகன் மற்றும் கெனிஷா ஒன்றாகவே காணப்பட்டார்கள். இதனால் ஆர்த்தி ஆதரவாளர்கள் கெனிஷாவை சமூக வலைதளங்களில் கடுமையாக தாக்கத் தொடங்கினார்கள். தொல்லை தாங்காமல் கெனிஷா தற்போது ரவி மோகனுடன் நட்பை முடித்துக்கொண்டு சென்னையை விட்டே சென்றுள்ளார்.  தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக சில நாட்கள் முன் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில் அவர் தன்னுடைய வலி நிறைந்த கடந்த கால வாழ்க்கை குறித்தும் பேசியிருந்தார். 

Continues below advertisement

கடந்த கால வாழ்க்கைப் பற்றி கெனிஷா 

தனது கடந்த காலத்தைப் பற்றி கெனிஷா " என் பெற்றோர்களுக்கு நான் ஒரே குழந்தை . என் அம்மா 2013 ஆம் ஆண்டு இறந்தார். என் தந்தை 2017 ஆம் ஆண்டு உயிரிழந்தார். என்னுடைய 4 வயதில் இருந்து என் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனக்கு 18 வயதில் திருமணம் நடந்தது. என் கணவருடம் 10 பெண்கள் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு உறவில் இருந்தார்கள். இந்த நபருடன் நான் வெறும் 4 மாதங்கள் மட்டுமே திருமண உறவில் இருந்தேன். இந்த நபர் என்னை செய்த கொடுமையில்  வயிற்றில் இருந்த குழந்தை வெளியே வந்தது. இதை எல்லாம் கடந்து அடுத்த பத்து ஆண்டுகளில் நான் சுயமாக என் சொந்த காலில் நின்றேன். ஆமான் நான் 500 ரூபாய் சம்பளத்திற்காக தான் என் பயணத்தை தொடங்கினேன். இன்று நான் பெரிய சம்பளத்திற்கு இசை நிகழ்ச்சிகளில் பாடும் நிலைக்கு வந்திருக்கிறேன். இந்த வளர்ச்சியை அடைவதற்காக நான் சமரசங்கள் செய்தேன் என யாரும் என்னை குறை சொல்ல முடியாது." என அவர் கூறியிருந்தார்

Continues below advertisement

மேலும் ரவி மோகன் சம்பந்தபட்டவர்கள் சிலர் தன்னை வேவு பார்ப்பதாகவும் பெங்களூரில் தனது கடந்த காலத்தைப் பற்றியும் முன்னாள் கணவரைப் பற்றி விசாரித்து வருவதாகவு கெனிஷா இந்த வீடியோவில் கூறியிருந்தார்.