எனக்கு 60 வயதாகும் போது எனது குழந்தைக்கு 20 வயதாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என குழந்தை குறித்து மனம் திறந்துள்ளார் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர். 


பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்பீர் கபூர். தனது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தினை நாடு முழுவதும் கொண்டுள்ளார். இவர் பாலிவுட்டின் மிகவும் க்ளாஸான நடிகை எனச் சொல்லப்படும் ஆலியா பட்டினை இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர் வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி தனது 40வது பிறந்தநாளினை கொண்டாடவுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவருக்குத்தான் முதல் பிறந்த நாள் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே  ரன்பீர் மற்றும் ஆலியா தம்பதியினரைப் பற்றியும் இவர்களுகளது  குழந்தை பற்றியும் ஏற்கனவே பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில், ஆலியாவின் மேனேஜர், இவர்கள் இருவரும் தற்போது தங்களது சினிமா வாழ்க்கையினை  மேம்படுத்தும் நோக்கத்தில் உள்ளனர். அதேநேரத்தில் குழந்தை அவர்களுக்கு எப்போது விருப்பமோ அப்போது பெற்றுக் கொள்வர் எனவும் தெரிவித்திருந்தார். 






இந்நிலையில் ரன்பீர் கபூர் அண்மையில் அளித்த  பேட்டி ஒன்றில், நீங்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வதாக இருக்குறீர்கள்?, குறிப்பாக எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள்? என கேட்கப்பட்ட கேள்விக்கு ரன்பீர் பிவருமாறு பதில் அளித்துள்ளார். எனக்கு 60 வயதாகும் போது எனது குழந்தைக்கு 20 வயதாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் எனவும், அவர்களுடன் விளையாடவும், பனிச்சறுக்கல்கள் போகவும், மலையேறாவும் ஆசைப்படுகிறேன் எனவும் பேசியுள்ளார். தற்போது அவருக்கு 39 வயது ஆகிறது. வரும் செப்டம்பர் 28ம் தேதி 40வது பிறந்த நாளினை கொண்டாடவுள்ளார் ரன்பீர். அடுத்த ஆண்டு ரன்பீர் ஆலியா தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது. இதனால் ரன்பீர் மற்றும் ஆலியா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண