நடிகை ரம்யா பாண்டியன் ரைஃபிள் ஷூட்டிங்கில் ஈடுபட்டு இருக்கிறார். 


தமிழில்  ‘டம்மி டப்பாசு’ படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத்தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’படத்தில் நடித்தார். இந்தப் படம் இவருக்கு நல்லப்பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து மொட்டை மாடியில் இவர் எடுத்த கவர்ச்சிப்படங்கள் இவரை பிரபலமாக்கியது. அதனைத்தொடர்ந்து பிக்பாஸில் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சீசனில் கலந்து கொண்ட அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.  


 






அத்துடன் சமீபத்தில் நடந்துமுடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும்  கலந்துகொண்ட இவர் 3-ம் இடம் பிடித்தார். தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


 






இந்த நிலையில் ரம்யா பாண்டியன் தற்போது  ரைஃபில் ஷூட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ரம்யா பாண்டியன்,  “ எதிர்பாராத விஷயங்கள் உங்களை ஆச்சரித்தில் ஆழ்த்தினால் அதை போன்ற விஷயம் வேறொன்றும் இருக்க முடியாது. கடந்த வாரம் என்னுடைய புதிய பேஷனை தொடங்கியிருக்கிறேன். எனக்கு துப்பாக்கி சுட சொல்லிக்கொடுத்து, என்னை உத்வேகப்படுத்திய தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் வீரர் ராஜசேகர பாண்டியனுக்கு நன்றி. இந்த அழகான அனுபவத்தை வழங்கிய திருச்சி ராயல் புதுக்கோட்டை விளையாட்டு மையத்திற்கு நன்றி”  என்று பதிவிட்டு இருக்கிறார்.