நான் ஈ, பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்ஆர்ஆர் (ரத்தம், ரணம், ரௌத்ரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்துள்ளார்.
தமிழில் லைகா நிறுவனம் வெளியிடும் இப்படத்தில் பாடலாசிரியர் மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே பாகுபலி படத்துக்கு வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு இப்படம் வரவிருக்கிறது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருக்கும் உயிரே என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய இயக்குநர் ராஜமௌலி, “அண்ணன் மரகதமணிதான் இசையமைத்துள்ளார். அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார். படத்தின் உயிர் எதைப்பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்குத்தான் இசையமைப்பார்.
அப்படி இந்தப் படத்தின் மொத்த ஆத்மாவையும் இப்பாடலில் கொண்டுவந்து வைத்திருக்கிறார். மதன் கார்க்கி இந்தப் பாடலை கேட்டபோதே கண்ணீர் சிந்தி ரசித்தார். அருமையான பாடல் வரிகளை கொடுத்திருக்கிறார்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்