Pawan Kalyan: பவன் கல்யாண் முதலமைச்சராவார் .. ஆந்திராவை அதிர வைத்த பார்த்திபன் பேச்சு!
உஸ்தாத் பகத் சிங் படத்தின் நிகழ்ச்சியின்போது, அரசியலில் நுழைந்து மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தலைவர் பவன் கல்யாண் என பார்த்திபன் புகழாரம் சூட்டினார்.

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடித்த பார்த்திபன், அப்படத்தின் நிகழ்ச்சியில், ஹீரோ பவன் கல்யாணை புகழ்ந்து தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள படம் “உஸ்தாத் பகத் சிங்”. இந்த படம் மார்ச் 19ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ஹைதராபாத்தில் உள்ள யூசப்குடா போலீஸ் மைதானத்தில் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹீரோயின் ஸ்ரீலீலா, பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். பார்த்திபன் இந்த படத்தில் நல்ல நாகப்பா என்ற வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண், நடிகர் பார்த்திபனை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சென்னையில் இருக்கும்போது பார்த்திபன், சீதா நடித்த புதிய பாதை படத்தை என் நண்பருடன் சேர்ந்து உதயம் தியேட்டரில் பார்த்தேன். அது அவரின் இயக்கத்தில் வெளியான முதல் படமாகும். அப்படம் மிகச்சிறந்த படமாகும். சிறந்த இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், உத்வேகப்படுத்தும் பேச்சாளராக திகழும் பார்த்திபன் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்.
"One fine day, Pawan Kalyan Garu will become a Chief Minister of Andhra Pradesh"#Parthiban #UstaadBhagatSingh pic.twitter.com/gIGGJta5Xp
— Mega Abhimani (@megaabhimani3) March 15, 2026
தொடர்ந்து பேசிய பார்த்திபன், “தனக்கே உரிய பாணியில் பவன் கல்யாணை புகழ்ந்து தள்ளினார். அவருடன் இப்படத்தில் பணிபுரிந்தது தனக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது என்றும், அவரிடம் சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கண்டதாகவும் கூறினார். மேலும், மக்கள் மீது அவர் கொண்டுள்ள அக்கறை காரணமாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் பவன் கல்யாணுக்கு இருக்கிறது. இந்தப் படத்திற்காக நான் ஹைதராபாத் வந்தபோது, ஒரு இருக்கையை முன்பதிவு செய்யச் சொன்னேன். அது தியேட்டர் இருக்கை கிடையாது. பவன் கல்யாணுக்காக முதல்வர் இருக்கையை முன்கூட்டியே முன்பதிவு செய்ய சொன்னேன். அரசியலில் நுழைந்து மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தலைவர் பவன் கல்யாண் என பார்த்திபன் புகழாரம் சூட்டினார்.
அதனால்தான் அவர் எனக்கு ஒரு உண்மையான ஹீரோவாகத் தெரிகிறார். பவன் கல்யாண் படங்களில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அவர் ஒரு உண்மையான ஹீரோவாக இருக்கிறார். தற்சமயம் ஆந்திராவின் துணை முதல்வராகப் பணியாற்றி வரும் பவன் கல்யாண் நிச்சயம் எதிர்காலத்தில் மாநிலத்தின் முதல்வராக வருவார் என நம்புகிறேன். முன்கூட்டியே அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனவும் பார்த்திபன் பேசினார். அவரின் பேச்சைக் கேட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த ரசிகர்கள் ஆரவாரமிட்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















