நடிகை பிரியங்கா மோகன் மீது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்து நிலையில் இதுகுறித்து யூடியுப் பேட்டி ஒன்றில் அவர் பேசியுள்ளார். விஜய் நடத்தி வரும் பிரபல பிஆர் ஏஜன்சியான தி ரூட் பிரியங்கா மோகனுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் அவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 

Continues below advertisement

 நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் கவனமீர்த்தார் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். டான் , எதற்கும் துணிந்தவன் , கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்துள்ள மேட் இன் கொரியா திரைப்படம் மார்ச் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 

திட்டமிட்ட விமர்சனங்கள் 

விஜயின் மேலாளர் ஜகதீஷ் பழனிசாமி நடித்து வரும் பி.ஆர் ஏஜன்சி த ரூட் மீடியாவில் . முதலில் இந்த ஏஜன்சியில் உறுப்பினராக இருந்த பிரியங்கா மோகன் 2024 ஆம் ஆண்டு அதை விட்டு வெளியேவந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பிரியங்கா மோகனின் நடிப்பு குறித்து பல்வேறு விமர்சன பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. மேலும் அவருடைய பட வாய்ப்புகளும் திடீரென்று குறையத் தொடங்கின . இதற்கு பின்னால் ஜகதீஷ் நடத்தி வரும் ரூட் மீடியாவின் திட்டமிட்ட செயல் என ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்தார்கள். தன் மீதான திட்டமிட்ட விமர்சனங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியங்கா மோகன் பேசியுள்ளார். 

Continues below advertisement

பி.ஆர் சதி குறித்து பிரியங்கா மோகன் 

கடந்த சில ஆண்டுகளாக தன் மீதான பிஆர் விமர்சனங்கள் குறித்து பேசியபோது " எனக்கு அது நடந்திருக்கிறது. ஆனால் எனக்கு தெரிந்து எல்லா பிரபலங்களையும் ட்ரோல் செய்கிறார்கள். பெரிய பெரிய இயக்குநர்கள் , நடிகர்கள் எல்லாரையும் ட்ரோல் செய்கிறார்கள். எனக்கு எதிராக  பி.ஆர் ஏஜன்சி மூலம் திட்டமிட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பினார்கள். ஆனால் நான் அதற்குள் போக விரும்பவில்லை. அதிலிருந்து ஒரு விஷயத்தை நான் தெரிந்துகொண்டேன். இது ரொம்ப நிலையற்ற துறை. யாருக்கு வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த விமர்சனங்கள் எல்லாம் ஒருவரை தவறான இடத்திற்கு எடுத்துச் செல்லும். அதனால் அதில் இருந்து பாதிக்கப்பட கூடாது என்பதை நான் இதன் மூலம்  கற்றுக்கொண்ட பாடம். " என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.