மகளுடன் பிரியங்கா சோப்ரா :


பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா , இந்த ஆண்டு துவக்கத்தில் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை ஒன்றை வரவேற்றனர் . மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என அந்த குழந்தைக்கு பெயர் வைத்தனர். தற்போது பிரியங்கா சோப்ரா தனது குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறார்.  இந்த நிலையில் தற்போது பிரியங்கா சோப்ரா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். “இந்த உலகத்தில் யாரையும் நேசிக்காத அளவிற்கு நேசிக்கிறேன் “ என கேப்ஷன் கொடுத்துள்ளார் . அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.






இந்த புகைப்படத்திற்கு கீழே பலரும் ஹார்ட் எமோஜியை பறக்கவிட்டு வரும் நிலையில் , பிரியங்காவின் சகோதரி , பரினீத்தி சோப்ரா  தன் அக்கா மகளை மிகவும் மிஸ் செய்வதாக கமெண்ட் செய்திருக்கிறார்.






என்னதான் அவ்வப்போது மகளுடன் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படத்தை பிரியங்கா வெளியிட்டாலும் கூட மால்தியின் முகம் தெரியும் புகைப்படத்தை வெளியிடவே இல்லை. பாலிவுட் நடிகையான பிரியங்கா தமிழ் சினிமாவில்தான் முதன் முதலாக அறிமுகமானார். விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்த பிறகு பாலிவுட் படங்களில் அதிக வாய்ப்புகள் வர தொடங்கியது. பின்னர் ஹாலிவுட் படங்களிலும் கூட நடித்தார். அதன் பிறகு அமெரிக்காவின் பிரபல பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸை காதலித்து 2018-ஆம் ஆண்டு இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.


தன்னை விட வயது குறைந்தவரை பிரியங்கா திருமணம் செய்துக்கொண்டதால் அவர் அதிகமான விமர்சனம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.