Priya Bhavani Shankar : பிரான்ஸ் ட்ரிப் எப்படி இருந்தது டீச்சர்...போஸ் எல்லாம் பக்கவா இருக்கு மேடம் 


ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து விஜய் டிவியின் "கல்யாணம் முதல் காதல் வரை" சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியா பவனி ஷங்கர் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். 


சினிமாவில் அறிமுகம்:


"மேயாத மான்" திரைப்படத்தின் மோளம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர். "கடைக்குட்டி சிங்கம்" படத்தில் கார்த்தியின் அக்கல் மகளாக "செல்லமா" கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். அதனை தொடர்ந்து மாஃபியா, ஓ மணப்பெண்ணே, ஹாஸ்டல், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 



சமீபத்தில் வெளியான இரட்டை படங்கள் :


இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான "யானை" திரைப்படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் வெளியான "குருதி ஆட்டம்" திரைப்படத்தில் வெண்ணிலா எனும் ஆசிரியர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் பிரியா பாவனை ஷங்கர். இந்த இரண்டு திரைப்படங்களும் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.  மேலும் பிரியா பவனி ஷங்கர் இந்தியன் 2 , திருச்சிற்றம்பலம், பொம்மை, அகிலன், ருத்ரன், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளார். 


 






உலக சுற்றுலா:


பிரியா பவனி ஷங்கர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது போஸ்ட்கள், புகைப்படங்கள் என்ன பதிவிட்டு ரசிகர்களுடன் இணைப்பில் இருப்பவர். சமீபத்தில் பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு பல முக்கியமான இடங்களில் வித்தியாசமான போஸ்களில் புகைப்படங்கள் எடுத்து அதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.


லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்:


அந்த வகையில் தற்போது மேலும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதற்கு இந்த உலகத்தில் நீங்கள் என்று அன்புடன் இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பல லைக்ஸ்கள் குவிந்துள்ளன. பலர் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளனர். 






ஸ்ரீமதிக்கு நீதி :


அவ்வப்போது சமூக அக்கறையோடு சில பதிவுகளையும் முன்வைப்பவர். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் பலியான மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு பலருக்கு பலமுறை பகிரப்பட்டுள்ளது. பலரும் பிரியா பவானி ஷங்கரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.