Pradeep Ranganathan Movies Collection:  நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் தொடர்பான முழு விவரங்களையும் கீழோ பார்ப்போம்.

Continues below advertisement

கோமாளி:

கடந்த 2019 ஆம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே தான் யார் என்பதை நிரூபித்தார். அதாவது கோமாளி திரைப்படம் தமிழகத்தில் 43.75 கோடி ரூபாய், கேரளாவில் 1.1 கோடி, கர்நாடகாவில் 1.6 கோடி, இந்தியவின் பிற பகுதிகளில் 0.25 கோடி, வெளி நாட்டில் 8.5 கோடி இவ்வாறாக உலக அளவில் கோமாளி திரைப்படம் மொத்தமாக 55.2 கோடி ரூபாய் வசூலித்தது.  

லவ் டுடே:

கோமாளி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான லவ் டுடோ திரைப்படத்தை தானே இயக்கி அந்த படத்தில் நடிகராகவும் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தைப் போலவே இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக 2K கிட்ஸ்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தார்கள். அந்த வகையில் 6 கோடி ரூபாயில் உருவான லவ் டுடே திரைப்படம் உலக அளவில் மொத்தம் 90.75 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனராக மட்டும் இல்லாமல் ஒரு நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் பிரதீப் ரங்கநாதன்.

Continues below advertisement

டிராகன்:

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் டிராகன். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து நடித்தவர் கயாடு லோகர். டிராகன் திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. முன்னர் வெளியான இரண்டு திரைப்படங்களை விடவும் இந்த படத்தின் வசூல் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களையே வாயை பிளக்க வைத்தது. அதாவது 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை கடந்தது. மொத்தமாக உலக அளவில் 153. 83 கோடி ரூபாயை வசூலித்தது. பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் நடிகர்களால் கூட செய்ய முடியாத சாதனையை செய்து பிரதீப் முக்கிய கதாநாயகனாக மாறினார்.

DUDE:

பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டூட். இந்த படம் வரும்  தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான மற்றொரு திரைப்படமான எல்.ஐ.கே இன்னொரு தேதியில் வெளியிடப்படும் என்று அந்த படக்குழு அறிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார். அதாவது அறிவியல் புனைவு வகையில் இப்படத்தின் திரைக்கதையினை பிரதீப் ரங்கநாதன் எழுதியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் சூட்டிங் நடைபெற இருப்பதாக சொல்கின்றனர் சினிமா வட்டாரங்களில்.